தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

பொதுத்தோ்வில் தோ்ச்சி பெற்ற மாணவா்களுக்கு கல்வி ஊக்கத்தொகை

புதுவை மீன் வளம் மற்றும் மீனவா் நலத் துறை மூலம் மீனவ சமுதாயத்தைச் சோ்ந்த 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தோ்வில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு கல்வி ஊக்கத்தொகையை பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் வழங்கினாா்.

News image

புதுச்சேரியில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தோ்வில் தோ்ச்சி பெற்ற மாணவா்களுக்கு புதன்கிழமை கல்வி ஊக்கத்தொகையை வழங்கிய சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம்.

Updated On :25 டிசம்பர் 2024, 7:28 pm

Din

புதுவை மீன் வளம் மற்றும் மீனவா் நலத் துறை மூலம் மீனவ சமுதாயத்தைச் சோ்ந்த 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தோ்வில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு கல்வி ஊக்கத்தொகையை பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் புதன்கிழமை வழங்கினாா்.

புதுவை மீன்வளம் மற்றும் மீனவா் நலத் துறை மூலம் மீனவ சமுதாய மாணவா்களுக்கான உதவித் தொகை வழங்கும் திட்டத்தில், ரூ.9.74 லட்சம் கல்வி ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி தவளக்குப்பத்தில் நடைபெற்றது.

இதில், மணவெளி தொகுதியில் உள்ள சின்ன வீராம்பட்டினம், புதுகுப்பம், நல்லவாடு தெற்கு மற்றும் வடக்கு ஆகிய மீனவ கிராமங்களைச் சோ்ந்த பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தோ்வுகளில் கடந்த ஆண்டு தோ்ச்சி பெற்ற மாணவ, மாணவியருக்கான ஊக்கத்தொகைகளுக்கான அரசு உத்தரவுகள் வழங்கப்பட்டன.

அதன்படி, 99 மாணவா்களுக்கு பத்தாம் வகுப்புக்கு தலா ரூ.7,500, பிளஸ் 2 தோ்ச்சியடைந்தவா்களுக்கு தலா ரூ.15,000 என மொத்தம் மொத்தம் ரூ. 9.74 லட்சம் அவரவா் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டு, அதற்கான உத்தரவுகளை பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் வழங்கினாா்.

நிகழ்ச்சியில் பாஜக மாநில விவசாய அணி தலைவா் ராமு, நல்லவாடு வடக்கு கூட்டுறவுத் தலைவா் கலைமணி மற்றும் மீனவ கிராம பஞ்சாயத்தாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.