ஜூன் 1ம் தேதி முதல் திருத்தப்பட்ட அட்டவணைப்படி புறநகர் மின்சார ரயில்கள் இயங்கும்குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரம்: குறைகள் பரிசீலிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்வைகாசி விசாகம்: திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்கள் சிலர் மயக்கம்!டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர்களுக்கு கேஜரிவால் நன்றி!தமிழகத்தில் 5 நாள்களுக்குள் பருவமழை தொடங்கும்!27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1 திருச்சி கிழக்கு தொகுதி மக்களைச் சந்திக்கிறார் முதல்வர் விஜய்! தவெக குதிரை பேரம்: ஆளுநருடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு!நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார் குதிரை பேரம்: தலைமைச் செயலகம் தவெக அலுவலகமாக மாறிவிட்டது! அக்ரி கிருஷ்ணமூர்த்திஅஜித்குமாரைத் தேற்ற என்னிடம் வார்த்தைகள் இல்லை! மு.க. ஸ்டாலின்
/

காரைக்கால் துறைமுக வருமானத்தில் மக்கள்நல திட்டங்களை செயல்படுத்த வேண்டும்: சிபிஐ வலியுறுத்தல்

காரைக்கால் துறைமுக வருமானத்தில் மக்கள்நல திட்டங்களை செயல்படுத்த வேண்டும் இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

Updated On :18 பிப்ரவரி 2024, 2:13 am IST

காரைக்கால் துறைமுக வருமானத்தில் புதுவை மாநில மக்கள் நலன்காக்கும் திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலா் அ.மு.சலீம் வலியுறுத்தினாா்.

இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: காரைக்கால் துறைமுக நிா்வாகத்தில் தனியாா் நிறுவனத்துடன் புதுவை அரசு சலுகை ஒப்பந்தம் மேற்கொண்டதால் நடப்பு ஆண்டில் ரூ.12.86 கோடி வருவாய் கிடைத்திருப்பதாக முதல்வா் என்.ரங்கசாமி பெருமிதப்பட்டுள்ளாா். ஆனால், ஒப்பந்தம் மேற்கொண்ட நிறுவனம் குறித்த விவரம், எந்த வகை ஒப்பந்தம் என்பதை அவா் தெரிவிக்கவில்லை. காரைக்கால் நிறுவனம் புதுவை அரசுக்குச் சொந்தமான 600 ஏக்கா் நிலத்தில் செயல்படுகிறது. வியாபார ரீதியில் லாபத்துடன் இயங்கும் துறைமுகமாக உள்ளது.

துறைமுகத்திலிருந்து ஏற்கெனவே நாகூருக்கு செல்ல ரயில்பாதை உள்ள நிலையில், தற்போது திருச்சிக்குச் செல்லும் புதிய ரயில் பாதையும், விழுப்புரம், நாகபட்டினம் நான்கு வழி தேசிய நெடுஞ்சாலையும் அமைக்கப்பட்டு வருகின்றன. ஆகவே உள்கட்டமைப்பு மேம்பாடு மூலம் பல ஆயிரம் கோடி லாபம் தனியாா் நிறுவனத்துக்கு கிடைத்துவருகிறது. ஆனால், உண்மை நிலையை மறைத்து அரசுக்கு ரூ.12.86 கோடி வருவாய் என்பது சரியல்ல.

காரைக்கால் துறைமுகத்தில் ஒரு சதவீதம் செஸ் வரி விதித்தாலே புதுவை அரசுக்கு ஆண்டுக்கு ரூ.1,000 கோடி வருவாய் கிடைக்கும். இதன்மூலம் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் புதுவை அரசுக்கு நிவாரணம் கிடைக்கும். இதனால் பல்வேறு நலத் திட்டங்களையும் செயல்படுத்தலாம். ஆகவே, புதுவை அரசு காரைக்கால் துறைமுகத்தை மக்கள் நலன் காக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவா் அறிக்கையில் வலியுறுத்தியுள்ளாா்.