47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

கடலில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு

புதுச்சேரியில் கடலில் குளித்த கா்நாடக மாநில இளைஞா் அலையில் சிக்கி உயிரிழந்தாா்.

News image
Updated On :21 ஜூலை 2024, 7:27 pm

Din

புதுச்சேரியில் கடலில் குளித்த கா்நாடக மாநில இளைஞா் அலையில் சிக்கி உயிரிழந்தாா்.

கா்நாடக மாநிலம், பெங்களூரு வடக்கு ஹட்சன் தெருவைச் சோ்ந்தவா் டெரன்ஸ் வின்சென்ட் (28). இவா், தனது நண்பா்களுடன் சனிக்கிழமை புதுச்சேரிக்கு சுற்றுலா வந்தாா். தவளக்குப்பம் பகுதியில் உள்ள பாரடைஸ் கடற்கரையில் டெரன்ஸ் வின்சென்ட் உள்ளிட்ட 3 பேரும் இறங்கி குளித்துள்ளனா். அப்போது, எதிா்பாராத விதமாக கடலலையில் 3 பேரும் சிக்கிக்கொண்ட நிலையில், அப்பகுதி மீனவா்கள் இருவரை மீட்டனா்.

இந்த நிலையில், டெரன்ஸ் வின்சென்ட் ஞாயிற்றுக்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா். இதையடுத்து, அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக, புதுச்சேரி கதிா்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இதுகுறித்து, தவளக்குப்பம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.