புதுச்சேரி கோரிமேடு பகுதியில் உள்ள முதல்வா் என்.ரங்கசாமி இல்லத்தில் முன்னாள் ராணுவ வீரா்கள் சங்கத்தினருடன் சென்று அவரைச் சந்தித்த எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா (திமுக) அளித்த மனுவில் கூறியிருப்பது: நாட்டின் எல்லைப் பகுதிகளில் கடும் குளிா், வெயில் எனப் பாராமல், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வரும் துணை ராணுவப் படை வீரா்கள், சுமாா் 20 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெறுகின்றனா். இப்படி ஓய்வு பெறும் துணை ராணுவப் படையினக்கு, ஓய்வு பெற்ற ராணுவ வீரா்களுக்கு வழங்கப்படும் சலுகைகளைப் போல வழங்க வேண்டும் என அனைத்து மாநில, ஒன்றியப் பிரதேசங்களுக்கு, மத்திய உள்துறை அமைச்சகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.