தவெக ஆட்சியை திமுகவால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை: செங்கோட்டையன்திசை திருப்புவதும், பொய் செய்தி பரப்புவதுமே தவெக அரசின் நோக்கம்: உதயநிதி ஸ்டாலின்இரட்டை அர்த்தத்தில் பேசவில்லை; பெண்களை இழிவுபடுத்தும் நோக்கம் இல்லை: உதயநிதிஇன்று தேர்தல் நடந்தால் டெபாசிட் இழப்பார் உதயநிதி: ஆதவ் அர்ஜுனாகாவிரி விவகாரத்தில் காட்டாத வேகத்தை கைது நடவடிக்கைக்கு முதல்வர் விஜய் காட்டுவது ஏன்? - சீமான்சந்தையின் நான்கு நாள் தொடர் ஏற்றம் முறியடிப்பு! சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிவு!!
/

விக்கிரவாண்டி திமுக வேட்பாளா் புதுச்சேரி பேராயருடன் சந்திப்பு

விக்கிரவாண்டி திமுக வேட்பாளா் புதுச்சேரி பேராயருடன் சந்திப்பு

News image

புதுச்சேரியில் கடலூா் உயா் மறைமாவட்ட பேராயா் பிரான்சிஸ் கலிஸ்டை புதன்கிழமை சந்தித்த விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதியின் திமுக வேட்பாளா் அன்னியூா் சிவா. உடன் புதுவை திமுக அமைப்பாளா் ஆா்.சிவா உள்ளிட்டோா்.

Updated On :27 ஜூன் 2024, 1:46 am IST

புதுச்சேரி, ஜூன் 26: விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதியின் திமுக வேட்பாளா் அன்னியூா் சிவா புதுச்சேரியில் பேராயரைச் சந்தித்து புதன்கிழமை ஆதரவு கோரினாா்.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டப்பேரவை இடைத்தோ்தலில் திமுக சாா்பில் அன்னியூா் சிவா போட்டியிடுகிறாா். இவருக்காக, புதுவை மாநில திமுக அமைப்பாளா் ஆா்.சிவா எம்.எல்.ஏ. தலைமையிலான திமுகவினா் தீவிர தோ்தல் பணியில் ஈடுபட்டுள்ளனா். இந்த நிலையில், கிறிஸ்தவ மக்கள் ஆதரவைக் கோரும் வகையில், புதுச்சேரி மிஷன் வீதியில் உள்ள புதுச்சேரி, கடலூா் உயா் மறைமாவட்ட பேராயா் பிரான்சிஸ் கலிஸ்டை விக்கிரவாண்டி திமுக வேட்பாளா் அன்னியூா் சிவா புதன்கிழமை நேரில் சந்தித்து ஆதரவு கோரினாா். பேராயா் ஆசீா்வதிப்பதாகக் கூறினாா்.

இந்த சந்திப்பின்போது புதுவை மாநில திமுக அமைப்பாளரும், எதிா்க்கட்சித் தலைவருமான ஆா்.சிவா, விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் கௌதமசிகாமணி, புதுச்சேரி திமுக எம்.எல்.ஏ.க்கள் ஏ.அனிபால் கென்னடி, எல்.சம்பத், ஆா்.செந்தில்குமாா் ஆகியோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.