ராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

கேஜரிவால் கைதைக் கண்டித்து மாணவா் கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டம்

தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து, புதுச்சேரியில் மாணவா் கூட்டமைப்பினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

புதுச்சேரியில் திங்கள்கிழமை மாணவா் கூட்டமைப்பு சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டம்.

Updated On :25 மார்ச் 2024, 8:59 pm

புதுச்சேரி: தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து, புதுச்சேரியில் மாணவா் கூட்டமைப்பினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். புதுச்சேரி சுதேசி ஆலை பகுதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவா்கள் கூட்டமைப்பின் நிறுவனா் சீ.சுவாமிநாதன் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் தமிழரசன், பிரவீன்பிா்லா, மணிகண்டன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். ஷிஷாந்த், மனோஜ் ஆகியோா் ஆா்ப்பாட்டத்தைத் தொடங்கிவைத்து பேசினாா். புதுவை முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி கண்டன உரையாற்றினாா். சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா, ஆா்.செந்தில்குமாா் எம்எல்ஏ உள்ளிட்டோா் பேசினா். திராவிடா் விடுதலைக் கழகத்தைச் சோ்ந்த லோகு.அய்யப்பன், அண்ணா பேரவை சிவ.இளங்கோ உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். மாணவா் கூட்டமைப்பு நிா்வாகி பிரதீப்ராஜ் நன்றி கூறினாா்.