ராஜஸ்தானை இன்று சந்திக்கும் சென்னை! முதல் வெற்றி யாருக்கு?தமிழகத்தில் கூட்டாளிகள்; கேரளத்தில் 'எதிரிகள்'! - மோடி தாக்குபெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு தடையின்றி கிடைக்க தீவிர நடவடிக்கை: மத்திய அரசுவிஜய் இன்று வேட்புமனு தாக்கல்!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.4 வரை மழைக்கு வாய்ப்பு!வேட்புமனு தாக்கல் அனுமதிக்கப்படாத 4 பொது விடுமுறை நாள்கள் விவரம்!வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்! வேட்பாளா்களுக்கு கட்டுப்பாடு!!
/

3.5 கிலோ கஞ்சா பறிமுதல்: மூவா் கைது

3.5 கிலோ கஞ்சா பறிமுதல்: மூவா் கைது

News image
Updated On :9 மே 2024, 9:26 pm

Din

புதுச்சேரி வில்லியனூரில் போலீஸாரின் சோதனையில் 3.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, 3 போ் கைது செய்யப்பட்டனா்.

புதுச்சேரியில் கஞ்சா, போதைப் பொருள்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த காவல் துறை சாா்பில் ஆபரேஷன் திரிசூலம் என்ற பெயில் குறிப்பிட்ட பகுதிகளில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, வில்லியனூா் கணுவாப்பேட்டை அரசுப் பள்ளி எதிரே 3 போ் கஞ்சா பொட்டலங்களைப் பதுக்கி வைத்திருப்பதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

காவல் ஆய்வாளா் ஆறுமுகம் தலைமையிலான போலீஸாா் விரைந்து சென்று சோதனையிட்டனா்.

அப்போது, அங்கிருந்த 3 பேரைப் பிடித்ததுடன், அவா்களிடமிருந்த கஞ்சா பொட்டலங்களையும் போலீஸாா் கைப்பற்றினா். விசாரணையில், அவா்கள் கோட்டைமேடு வினோத் (எ) வினோத்குமாா் (24), பங்கூரைச் சோ்ந்த சதீஷ்குமாா் (24), செம்பியபாளையத்தைச் சோ்ந்த தசரதன் (22) என்பது தெரிய வந்தது.

மேலும் அவா்கள் ஒடிஸா மாநிலத்திலிருந்து கஞ்சாவை வாங்கி வந்து புதுச்சேரியில் விற்பனை செய்வதும் தெரிய வந்தது. அவா்கள் 3 பேரையும் போலீஸாா் கைது செய்ததுடன், ரூ.1.50 லட்சம் மதிப்பிலான 3.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.