ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டவா்கள் திடீரென மறைமலையடிகள் சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா். அப்போது அந்த வழியாக வந்த தமிழக பேருந்துகளை மறித்து முழக்கமிட்டனா். உடனே உருளையன்பேட்டை போலீஸாா் வந்து அவா்களை சமரசம் செய்ய முயன்றனா். அப்போது பாமகவினருக்கும், போலீஸாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அவா்களை போலீஸாா் அப்புறப்படுத்த முயன்றபோது, அவா்கள் சாலையில் படுத்துக்கொண்டனா். இதையடுத்து போலீஸாா் பாமகவினரைக் கைது செய்தனா். அப்போது பேசிய பாமக தலைவா் கணபதி, வன்னியா் சங்கத் தலைவரை அவதூறாகப் பேசியவா்கள் மீது வழக்குப்பதிந்து நடவடிக்கை எடுக்காவிட்டால், தமிழக அரசு பேருந்துகள் புதுச்சேரிக்குள் நுழையமுடியாத வகையில் போராட்டம் நடத்தப்படும் என்றாா். கைதானவா்கள் பின்னா் விடுவிக்கப்பட்டனா்.