கோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

புதுச்சேரியில் டிச.20 முதல் மீண்டும் விமான சேவை!

டிசம்பர் 20 முதல் விமான சேவை மீண்டும் தொடங்கப்படும்

News image
புதுச்சேரியில் விமான சேவை
Updated On :8 நவம்பர் 2024, 9:51 am

DIN

புதுச்சேரியிலிருந்து பெங்களூரு, ஜதாராபாத்திற்கு டிசம்பர் 20 முதல் மீண்டும் விமான சேவை தொடக்குகிறது.

புதுச்சேரி லாஸ்பேட்டையில் உள்ள விமான நிலையம் கடந்த 2013 ஜனவரியில் திறக்கப்பட்டது. விமான நிலையம் பராமரிப்பு மற்றும் சீரமைப்பு பணிகளுக்காகக் கடந்தாண்டு ஜூன் மாதம் மூடப்பட்டு விமான சேவைகளும் நிறுத்தப்பட்டன. இந்த பணிகள் நிறைவடைந்து கடந்தாண்டு அக்டோபர் முதல் மீண்டும் விமான நிலையம் செயல்படத் தொடங்கியது.

புதுச்சேரியிலிருந்து பெங்களூரு, ஐதராபாத்திற்கு விமானங்களை இயக்குவதை கடந்த மார்ச்சுடன் ஸ்பைஸ்ஜெட் நிறுத்தியது. இதனால் கடந்த ஏழு மாதங்களாக விமானங்கள் ஏதும் புதுச்சேரியிலிருந்துஇயக்கப்படாமல் இருந்தது.

இந்த நிலையில் புதுச்சேரியிலிருந்து மீண்டும் விமானச் சேவை துவங்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக இன்டிகோ நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியது.

இதையடுத்து டிசம்பர் 20 முதல் விமான சேவை மீண்டும் தொடங்கப்படும் என புதுச்சேரி விமான நிலைய இயக்குநர் ராஜசேகர் ரெட்டி இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.