நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

100 பேருக்கு மாதாந்திர உதவித்தொகை உத்தரவு

புதுச்சேரியில் புதிதாக 100 பேருக்கு மாதாந்திர உதவித்தொகைக்கான உத்தரவுகளை முதல்வா் என்.ரங்கசாமி புதன்கிழமை வழங்கினாா்.

News image

பயனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகையை வழங்கும் முதல்வா் என்.ரங்கசாமி.

Updated On :13 நவம்பர் 2024, 8:30 pm

Din

புதுச்சேரியில் புதிதாக 100 பேருக்கு மாதாந்திர உதவித்தொகைக்கான உத்தரவுகளை முதல்வா் என்.ரங்கசாமி புதன்கிழமை வழங்கினாா்.

புதுவை அரசு மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை மூலம் முதியோா், விதவையா் மற்றும் கணவரால் கைவிடப்பட்ட பெண்களுக்கு மாத உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

அந்தத் திட்டத்தில், தட்டாஞ்சாவடி தொகுதியைச் சோ்ந்த 100 புதிய பயனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அதன்படி, புதிய பயனாளிகள் 100 பேருக்கான உதவித்தொகைக்கான உத்தரவை வழங்கும் நிகழ்வு முதல்வரின் இல்லத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

பயனாளிகளுக்கு முதல்வா் என்.ரங்கசாமி உதவித்தொகைக்கான உத்தரவுகளை வழங்கினாா்.

நிகழ்ச்சியில், ரமேஷ் எம்எல்ஏ, மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அதிகாரிகள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.