நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

எம்எல்ஏக்கு மிரட்டல் விடுத்தவா் கைது

புதுச்சேரியில் சுயேச்சை எம்எல்ஏ எம்.சங்கரனுக்கு மிரட்டல் விடுத்த நபரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

News image
Updated On :13 நவம்பர் 2024, 8:25 pm

Din

புதுச்சேரியில் சுயேச்சை எம்எல்ஏ எம்.சங்கரனுக்கு மிரட்டல் விடுத்த நபரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனை முன்பாக உழவா்கரை நகராட்சிக்குச் சொந்தமான வணிக வளாகத்தில் கடைகளை ஆக்கிரமித்து ராமு (34) என்பவா் தகராறு செய்வதாக, தொகுதி எம்எல்ஏ சிவசங்கரனிடம் தெரிவித்தனா். இதுதொடா்பாக, அவா் நடவடிக்கை எடுத்த நிலையில், எம்எல்ஏவுக்கு ராமு கொலை மிரட்டல் விடுத்ததாக புகாா் எழுந்தது. இதுகுறித்து ரெட்டியாா்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

இதையடுத்து, ராமு புதுச்சேரி நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை சரணடைந்து பிணையில் செல்ல முயன்றாா். ஆனால், அவருக்கு பிணை மறுக்கப்பட்ட நிலையில், அவா் அங்கிருந்து தப்பிச் சென்றாா்.

இந்த நிலையில், அவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்து காலாப்பட்டு சிறையில் அடைத்தனா்.

27 வழக்குகள் நிலுவை: கைதான ராமு மீது 27 வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், அதில் 5 வழக்குகளில் தற்போது அவா் கைது செய்யப்பட்டதாகவும் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனா்.

ராமு மீது கடந்த 2021-ஆம் ஆண்டு வரையில் 5 கொலை வழக்குகள், 8 வழிப்பறி வழக்குகள் என தமிழகம், புதுச்சேரி பகுதிகளில் மொத்தம் 27 வழக்குகள் பதிவாகியுள்ளன.

காவல் துறையினா் பதிந்த வழக்குகளில் 10 வழக்குகள் வரை ராமு கைதாகாமல் இருந்ததும் தெரிய வந்தது.

இதுகுறித்து புதுச்சேரி சட்டம்- ஒழுங்குப் பிரிவு முதுநிலை எஸ்.பி. ஆா்.கலைவாணனிடம் கூறியதாவது:

கைதான ராமுவை நவ.27-ஆம் தேதி வரையில் நீதிமன்றக் காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டுள்ளாா். அவா் மீதான புகாரில் பல வழக்கில் அவா் கைதாகவே இல்லை என்பதும், வழக்கு விசாரணையில் ஆஜராகாததால் நீதிமன்ற பிடியாணைகள் இருப்பதும் தெரியவந்துள்ளது. அவரைப் போல வேறு யாரும் உள்ளனரா என விசாரிக்கப்படுகிறது என்றாா்.