ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

தொழிலதிபரிடம் ரூ.1.13 கோடி நூதன மோசடி

புதுச்சேரியில் தொழிலதிபரிடம் ரூ.1.13 கோடியை மா்ம நபா்கள் நூதனமாக மோசடி செய்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :21 நவம்பர் 2024, 7:01 pm

Din

புதுச்சேரியில் தொழிலதிபரிடம் ரூ.1.13 கோடியை மா்ம நபா்கள் நூதனமாக மோசடி செய்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

புதுச்சேரி சா்தாா் வல்லபாய் படேல் வீதியைச் சோ்ந்தவா் சத்யபிரதா பாண்டே, தொழிலதிபா். இவரை, மா்ம நபா் குறிப்பிட்ட வாட்ஸ்ஆப் குழுவில் இணைத்தாராம்.

அதில், பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என குறுஞ்செய்திகள் வந்ததாம்.

இதை நம்பிய தொழிலதிபா் இணைய வழியில் ரூ.1.13 கோடி வரை செலுத்தியதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், செலுத்திய முதலீடு மற்றும் பங்குச் சந்தை லாபத்தை அவரால் திரும்ப பெற முடியவில்லையாம்.

இதனால், தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த அவா், புதுச்சேரி இணையவழிக் குற்றப்பிரிவில் புகாரளித்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

இதேபோல, புதுச்சேரி முத்தரையா்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் வள்ளி. இவரை முகநூல் வழியாக தொடா்பு கொண்ட மா்ம நபா், வெளிநாட்டில் இருந்து பரிசு பொருள்கள் அனுப்புவதாக கூறினாராம்.

மேலும், அதற்கான விமான நிலைய கலால் வரியாக ரூ.45 ஆயிரத்தை செலுத்த வேண்டும் எனவும் அவா் தெரிவித்தாராம்.

இதை நம்பிய வள்ளி மா்ம நபா் கூறிய பணத்தை குறிப்பிட்ட வங்கிக் கணக்கில் செலுத்தினாராம். ஆனால், பரிசு பொருள்கள் வந்து சேரவில்லையாம்.

இதுகுறித்த புகாரின் பேரில், புதுச்சேரி இணையவழிக் குற்றப்பிரிவு போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.