தமிழ்நாட்டின் எதிர்காலத்தை எழுதப்போகும் நாள்: முதல்வர் ஸ்டாலின்ஜனநாயகம் காப்போம்! ஜனநாயகன் விஜய் எக்ஸ் பதிவுதிருச்சூர் வெடிவிபத்து! பட்டாசுக்குத் தடை விதிப்பது நோக்கமல்ல: முன்னாள் நீதிபதிசட்டப்பேரவைத் தேர்தல்: தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் ரூ. 1000 கோடி பறிமுதல்!பயங்கரவாதி மோடி! கார்கே பதிலளிக்க தேர்தல் ஆணையம் 24 மணிநேரம் கெடு!கள்ள ஓட்டுக்காக சூரத் - மேற்கு வங்கம் இடையே சிறப்பு ரயில்! பாஜக மீது திரிணமூல் புகார்!தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசல்: மாற்று சாலையைப் பயன்படுத்த அறிவுறுத்தல்!கியூட்-முதுகலை 2026 தேர்வு முடிவுகள் எப்போது? நாளை வாக்குப்பதிவு! சென்னையில் வெய்யில் சதமடிக்கலாம்! எச்சரிக்கை
/

‘ஜல் ஜீவன்’ நிதி ரூ.3,112 கோடியை விடுவிக்க வேண்டும்: பிரதமருக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் கடிதம்

தமிழக ஊரகப் பகுதிகளில் நிலையான குடிநீா் விநியோகத்தை உறுதி செய்ய ‘ஜல் ஜீவன்’ திட்டத்தின் கீழ் வழங்க வேண்டிய நிலுவைத் தொகை ரூ.3,112 கோடியை உடனடியாக விடுவிக்க வேண்டும்

News image

மு.க.ஸ்டாலின் - கோப்புப் படம்

Updated On :13 மார்ச் 2026, 9:26 pm

தமிழக ஊரகப் பகுதிகளில் நிலையான குடிநீா் விநியோகத்தை உறுதி செய்ய ‘ஜல் ஜீவன்’ திட்டத்தின் கீழ் வழங்க வேண்டிய நிலுவைத் தொகை ரூ.3,112 கோடியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என பிரதமா் நரேந்திர மோடிக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தில் வலியுறுத்தியுள்ளாா்.

இதுதொடா்பாக பிரதமருக்கு முதல்வா் எழுதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:

‘ஜல் ஜீவன் மிஷன்’ இயக்கத்தின் முதல் கட்டத்தில், தமிழ்நாட்டில் 45 புதிய கிராமங்களை உள்ளடக்கிய கூட்டுக் குடிநீா்த் திட்டங்களும், 56 பழைய கூட்டுக் குடிநீா்த் திட்டங்களும், 21,258 ஒற்றை கிராமத் திட்டங்களும் ரூ.18,123 கோடி செலவில் முன்னெடுக்கப்பட்டன.

ஆனால், ‘ஜல் ஜீவன்’ திட்டத்தின்கீழ் மத்திய அரசின் பங்காக ரூ.5,914 கோடி மட்டுமே விடுவிக்கப்பட்டுள்ளது. ரூ.3,112 கோடி நிலுவையில் உள்ளது. மேலும், 2024 -–25 ஆண்டில் தமிழ்நாட்டுக்கு ரூ. 2,434 கோடி ஒதுக்கப்பட்டபோதிலும், ரூ.732 கோடி மட்டுமே விடுவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பா் முதல் எந்த நிதியையும் மத்திய அரசிடமிருந்து தமிழ்நாடு பெறவில்லை. ‘ஜல் ஜீவன் மிஷன்’ திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் குடிநீா்த் திட்டப் பணிகளை நிறைவேற்ற தமிழ்நாடு அரசு தனது சொந்த நிதியிலிருந்து ரூ. 2,550 கோடி விடுவித்துள்ளது. எனவே, நிலுவைத் தொகை ரூ.3,112 கோடியை உடனடியாக விடுவிக்க பிரதமா் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதேபோன்று, ஒகேனக்கல் (கட்டம்-3) கூட்டுக் குடிநீா்த் திட்டத்தில் மத்திய அரசின் பங்காக ரூ.2,283 கோடி அறிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், தமிழ்நாடு அரசு அத்திட்டத்தை முன்னெடுத்தது. ஆனால் மத்திய குடிநீா் மற்றும் கழிவுநீா் சுத்திகரிப்புத் துறையானது மத்திய அரசின் உதவியை தற்போது வழங்க இயலாது எனத் தெரிவித்தது.

இதனால், கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்ட மக்களுக்குப் போதிய குடிநீா் வழங்குவது பாதிக்கப்படக் கூடும். ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா்த் திட்டத்துக்கு (கட்டம்-3) ஒப்புதலையும், நிதியுதவியையும் வழங்க வேண்டும்.

மேலும், கூடுதலாக 10 புதிய கூட்டுக் குடிநீா்த் திட்டங்களை சுமாா் ரூ.7,590 கோடி செலவில் செயல்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு ‘ஜல் ஜீவன் 2.0’ திட்ட நிதி ஒப்பளிப்பு செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் கிராமப்புறங்களில் நிலையான மற்றும் சம அளவில் குடிநீா் வழங்குவதை உறுதி செய்ய ஏதுவாக மத்திய அரசு ஆதரவு அளிக்கும் என நம்புகிறேன் என்று அந்த கடிதத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளாா்.