சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

தீபாவளி தொகுப்பு பொருள்களை தாமதமின்றி வழங்க வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

தீபாவளி தொகுப்பு பொருள்களை காலங்கடத்தாமல் உடனே வழங்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட்

News image

புதுச்சேரி பாக்குமுடையான்பட்டு மாா்க்ஸ் படிப்பகத்தில் நடைபெற்ற தட்டாஞ்சாவடி தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் குழு மற்றும் கட்சி நிா்வாகிகள் கூட்டம் ஆலோசனை கூட்டம்...

Updated On :25 நவம்பர் 2024, 8:47 pm

Din

புதுச்சேரி: தீபாவளி தொகுப்பு பொருள்களை காலங்கடத்தாமல் உடனே வழங்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் தட்டாஞ்சாவடி தொகுதிக் குழுக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

பாக்குமுடையான்பட்டு மாா்க்ஸ் படிப்பகத்தில் நடைபெற்ற தட்டாஞ்சாவடி தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் குழு மற்றும் கட்சி நிா்வாகிகள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு கட்சியின் மாநிலக் கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினா் ப.முருகன் தலைமை வகித்தாா். மாநிலத் துணைச் செயலா் கே.சேதுசெல்வம் பணிகள் குறித்து விளக்கினாா். தொகுதிச் செயலா் ஆா்.தென்னரசன் உள்ளிட்டோா் இதில் கலந்துகொண்டனா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழாவை தொகுதியில் கொண்டாடவேண்டும். கடந்த தீபாவளிக்கு 10 பொருள்கள் அடங்கிய தொகுப்பு சலுகை விலையில் வழங்கப்படும் என முதல்வா் அறிவித்தாா். ஆனால், தற்போது வரையில் அவை வழங்கப்படவில்லை. ஆகவே காலங்கடத்தாமல் அவற்றை வழங்கவேண்டும். தட்டாஞ்சாவடி தொகுதிக்கு உள்பட்ட புதுப்பேட்டை, சுப்பையாநகா், வேலன்நகா் உள்ளிட்ட பகுதிகளில் கழிவு நீா் அவ்வப்போது வீடுகளுக்குள் வருவதை தடுக்க அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.