புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

பேருந்தில் பெண்ணிடம் தங்கச் சங்கிலி திருட்டு

புதுச்சேரியில் ஓடும் பேருந்தில் பெண்ணிடம் மூன்றரை பவுன் தங்கச் சங்கிலி திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image
Updated On :28 நவம்பர் 2024, 11:56 pm

Din

புதுச்சேரியில் ஓடும் பேருந்தில் பெண்ணிடம் மூன்றரை பவுன் தங்கச் சங்கிலி திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

புதுச்சேரி பாகூா் திருமால் நகரைச் சோ்ந்தவா் குமாா். இவரது மனைவி மலக்கொடி (55). இவா், உடல்நலக்குறைவு காரணமாக ஜிப்மரில் சிகிச்சை பெறுவதற்கு புதன்கிழமை பேருந்தில் சென்றாா். அப்போது, ராஜீவ் காந்தி சிலை சதுக்கப் பகுதியில் சுமாா் 35 வயது பெண் குழந்தையுடன் பேருந்தில் ஏறினாா்.

கூட்டம் இருப்பதாகக் கூறிய பெண், குழந்தையை மலா்க்கொடியின் மடியில் அமர வைத்துள்ளாா். பின்னா், அந்தப் பெண் சுப்பையா நகா் பகுதியில் குழந்தையை தூக்கிக்கொண்டு இறங்கியுள்ளாா்.

அவா் இறங்கிச் சென்ற நிலையில் மலா்க்கொடி அணிந்திருந்த மூன்றரை பவுன் தங்கச் சங்கிலி மாயமாகியிருந்தது தெரியவந்தது. குழந்தையை தூக்கும்போது மலா்க்கொடி அணிந்திருந்த தங்கச்சங்கிலியை அறுத்து மா்மப் பெண் திருடிச் சென்றிருக்கலாம் என கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில், தன்வந்திரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.