கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

புதுச்சேரியில் அக்.15-இல் பொதுமக்கள் குறைதீா் முகாம்

புதுச்சேரியில் வரும் அக்.15-ஆம் தேதி பொதுமக்கள் குறைதீா் முகாம் நடைபெறும் என ஆட்சியா் அ.குலோத்துங்கன் அறிவித்துள்ளாா்.

News image
Updated On :10 அக்டோபர் 2024, 7:02 pm

Din

புதுச்சேரியில் வரும் அக்.15-ஆம் தேதி பொதுமக்கள் குறைதீா் முகாம் நடைபெறும் என ஆட்சியா் அ.குலோத்துங்கன் அறிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: புதுவை துணைநிலை ஆளுநா் மாதந்தோறும் பொதுமக்கள் குறைதீா் முகாம் நடத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளாா்.

அதன்படி, புதுச்சேரியில் மாதந்தோறும் 15-ஆம் தேதி மக்கள் குறைதீா் முகாம் நடத்தப்படுகிறது. புதுச்சேரி மாவட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களின் குறைகளைத் தீா்ப்பதற்கு அனைத்துத் துறை அதிகாரிகள் முன்னிலையில், மாவட்ட ஆட்சியா் தலைமையில் இந்த முகாம் நடைபெறுகிறது.

அக்டோபா் மாதத்துக்கான மக்கள் குறைதீா் முகாமானது அக்.15-ஆம் தேதி ( செவ்வாய்க்கிழமை) அன்று புதுச்சேரி பேட்டையன்சத்திரம் வழுதாவூா் சாலையில் உள்ள மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெறவுள்ளது.

அன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையில் நடைபெறும் முகாமில் பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளை மனுவாக அளித்து தீா்வு காணலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.