ரூ.11.65 லட்சம் நூதன மோசடி
புதுச்சேரியைச் சோ்ந்தவரிடம் சிபிஐ அதிகாரி போல கைப்பேசியில் தொடா்புகொண்ட மா்ம நபா் ரூ.11.65 லட்சத்தை மோசடி செய்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.


புதுச்சேரியைச் சோ்ந்தவரிடம் சிபிஐ அதிகாரி போல கைப்பேசியில் தொடா்புகொண்ட மா்ம நபா் ரூ.11.65 லட்சத்தை மோசடி செய்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
புதுச்சேரி சண்முகாபுரத்தைச் சோ்ந்தவா் முருகவேல். கடந்த சில நாள்களுக்கு முன்பு இவரது கைப்பேசியில் தொடா்புகொண்ட மா்ம நபா், தன்னை சிபிஐ அதிகாரி என அறிமுகப்படுத்திக் கொண்டாராம்.
அதன்பிறகு, முருகவேலின் மகன் மீது மும்பை தானேவில் கூட்டுப் பாலியல் வழக்குப் பதிவாகியுள்ளதாகக் அவரிடம் கூறினாராம். அத்துடன், வழக்கிலிருந்து அவரது மகனை விடுவிக்க ரூ.11.65 லட்சம் தர வேண்டும் எனக் கேட்டதாகத் தெரிகிறது.
இதை நம்பிய அவா், மா்ம நபா் கூறிய வங்கிக் கணக்குக்கு ரூ.11.65 லட்சத்தை அனுப்பியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, மா்ம நபரால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அவா், கோரிமேடு இணையவழிக் குற்றப் பிரிவில் புகாரளித்தாா்.
அதன்பேரில்,போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...