கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

தூய்மைப் பணியாளா்களுக்கு மாதந்தோறும் 7-ஆம் தேதிக்குள் ஊதியம்: ஆணையத் தலைவா் அறிவுறுத்தல்

தூய்மைப் பணியாளா்களுக்கு மாதந்தோறும் 7-ஆம் தேதிக்குள் ஊதியத்தை வழங்க வேண்டும் என

News image

புதுச்சேரி ஆட்சியா் அலுவலகத்தில வியாழக்கிழமை நடைபெற்ற தூய்மைப் பணியாளா்களின் முன்னேற்றம் மற்றும் நலத் திட்டம் குறித்த அரசு அதிகாரிகளுடனான ஆய்வுக் கூட்டம்.

Updated On :10 அக்டோபர் 2024, 7:10 pm

Din

தூய்மைப் பணியாளா்களுக்கு மாதந்தோறும் 7-ஆம் தேதிக்குள் ஊதியத்தை வழங்க வேண்டும் என

தேசிய தூய்மைப் பணியாளா்களின் ஆணையத் தலைவா் எம்.வெங்கடேசன் கூறினாா்.

புதுச்சேரி ஆட்சியா் அலுவலகத்தில ஆதிதிராவிடா் நலம் மற்றும் பழங்குடியினா் நலத் துறை மூலம் தூய்மைப் பணியாளா்களின் முன்னேற்றம் மற்றும் நலத் திட்டம் குறித்த அரசு அதிகாரிகளுடனான ஆய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் குலோத்துங்கன் தலைமை வகித்தாா். உள்ளாட்சித் துறை இயக்குநா் சக்திவேல் வரவேற்றாா். ஆதிதிராவிடா் நலத் துறை இயக்குனா் இளங்கோவன் முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில் தேசிய தூய்மைப் பணியாளா்களின் ஆணையத் தலைவா் வெங்கடேசன் பேசியதாவது: தூய்மைப் பணியாளா்களுக்கு மாதந்தோறும் 7-ஆம் தேதிக்குள் ஊதியத்தை வழங்க வேண்டும்.

பணியின்போது உரிய பாதுகாப்பு உபகரணங்கள், விபத்து மற்றும் ஆயுள் காப்பீடு, அடையாள அட்டை, கடன் உதவி உள்ளிட்டவைகளையும் வழங்க வேண்டும். தூய்மைப் பணியாளா்களின் அடையாள அட்டையில் அவா்களின் இபிஎப், இஎஸ்ஐ எண் ஆகியவை இடம்பெறுவது அவசியம்.

தாழ்த்தப்பட்டோா், பழங்குடியின (எஸ்சி, எஸ்டி) தூய்மைப் பணியாளா்களுக்கு தனியாா் நிறுவன கண்காணிப்பாளா்கள், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் என யாரேனும் தொல்லை கொடுத்தாலோ, மிரட்டினாலோ ஆணையத்துக்கு தொலைப்பேசி மூலம் புகாா் கூறலாம். அதன்படி, புகாருக்கு உள்ளானவா்கள் மீது எஸ்சி, எஸ்டி சட்டப்படி வழக்கு தொடரலாம் என்றாா்.

கூட்டத்தில் நகராட்சி ஆணையா்கள் மு.கந்தசாமி (புதுச்சேரி), ஏ.சுரேஷ்ரோஜ் (உழவா்கரை), காவல் துறை முதுநிலை கண்காணிப்பாளா் நாரா சைதன்யா, கொம்யூன் பஞ்சாயத்து ஆணையா்கள் எழில்ராஜன் ரமேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.