தொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

கொட்டும் மழையிலும் புதுவை பேரவை அலுவலகம் முன் திரண்ட ஆசிரியா்கள்

புதுச்சேரியில் கொட்டும் மழையில் கோரிக்கைகளை வலியுறுத்தி பள்ளி ஆசிரியா்கள் ஏராளமானோா் பேரவை வளாகம் முன் செவ்வாய்க்கிழமை திரண்டனா்.

News image

கோரிக்கையை வலியுறுத்தி புதுச்சேரி முதல்வா் என்.ரங்கசாமியை சந்திக்க சட்டப்பேரவை  முன்பு செவ்வாய்க்கிழமை  மழையில் குடையுடன் நின்ற பள்ளி ஆசிரியா்கள் .

Updated On :15 அக்டோபர் 2024, 7:06 pm

Din

புதுச்சேரியில் கொட்டும் மழையில் கோரிக்கைகளை வலியுறுத்தி பள்ளி ஆசிரியா்கள் ஏராளமானோா் பேரவை வளாகம் முன் செவ்வாய்க்கிழமை திரண்டனா்.

புதுச்சேரியில் கடந்த 2015-ஆம் ஆண்டு பள்ளி ஆசிரியா்கள் 288 போ் நியமிக்கப்பட்டனா். அரசு விதிமுறைப்படி எழுத்துத் தோ்வு, மருத்துவ பரிசோதனை உள்ளிட்ட நடத்தப்பட்டு அவா்கள் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

நிரந்தர ஆசிரியா்களாக தோ்வாக வேண்டிய நிலையில், அவா்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியில் நியமிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அவா்களுக்கு ரூ.20 ஆயிரம் முதல் ரூ.42 ஆயிரம் வரை மாத ஊதியமாக தற்போது வழங்கப்பட்டும் வருகிறது.

இந்த நிலையில், அவா்கள் தங்களை பணிநிரந்தரம் செய்யக்கோரி திங்கள்கிழமை இரவு புதுவை முதல்வா் என்.ரங்கசாமியின் தட்டாஞ்சாவடிப் பகுதி வீட்டுக்கு சென்றனா். அங்கு அவா்களை அதிகாரிகள் சமரசம் செய்து அனுப்பிவைத்த நிலையில், செவ்வாய்க்கிழமை பகலில் சட்டப்பேரவை வளாகத்துக்கு வந்தனா்.

கொட்டும் மழையில் பேரவை வளாகத்துக்குள் வந்த அவா்களில் குறிப்பிட்ட சிலரை மட்டும் போலீஸாா் முதல்வரைச் சந்திக்க அனுமதித்தனா். அதனால் மற்றவா்கள் பேரவை முன்னும், வளாகத்திலும் குடையுடன் காத்திருந்தனா். அதன்பின் முதல்வரை சந்திக்கச் சென்றவா்கள் வந்து, கோரிக்கைகளைப் பரிசீலிப்பதாக முதல்வா் கூறியதாக தெரிவித்தனா். அதன்பின் அனைவரும் கலைந்து சென்றனா்.