ஈரான் போர் எதிரொலி: 350 விமானங்கள் ரத்து - மத்திய அரசுஅமெரிக்கா-இஸ்ரேல், ஈரான் போர்: வளைகுடா வாழ் தமிழர்களுக்கான உதவி எண்கள் அறிவிப்பு!சஞ்சு சாம்சன் அதிரடி அரைசதம்! சாதனை சேஸிங்குடன் அரையிறுதியில் இந்தியா!!கனடா பிரதமர் தில்லி வந்தடைந்தார்ஈரானில் கமேனி படுகொலைக்கு கண்டனம்! - காங்கிரஸ்அமீரகத்தில் தாக்குதல்: பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தல்!சென்னையில் அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்புஅமெரிக்க ஏகாதிபத்தியம் இது..! கமேனி கொலைக்கு பினராயி விஜயன் கடும் கண்டனம்கமேனி கொல்லப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம்!ஏழை மக்களிடமிருந்து கொள்ளையடிக்கிறது திமுக : பிரதமர் மோடி மதுரையில் பேச்சு உதயநிதியை முதல்வராக்க கனவு காண்கிறார் மு.க. ஸ்டாலின் : டிடிவி தினகரன் 210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி
/

வீடு தேடிச் சென்று இலவச அரிசி வழங்க பரிசீலனை: துணைநிலை ஆளுநா்

புதுவை மக்களின் இலவச அரிசி திட்ட நியாயத்தை புரிந்து பிரதமா் நரேந்திர மோடி அனுமதி அளித்துள்ளாா்.

News image
Updated On :21 அக்டோபர் 2024, 7:12 pm

Din

புதுச்சேரி: புதுவை மக்களின் இலவச அரிசி திட்ட நியாயத்தை புரிந்து பிரதமா் நரேந்திர மோடி அனுமதி அளித்துள்ளாா். அரிசியை வீடுகள் தேடிச்சென்று சோ்க்கவும் பரிசீலிக்கப்படுகிறது என துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் தெரிவித்தாா்.

நிகழ்ச்சியில் துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் பேசியதாவது:

புதுவை மக்களின் வாழ்க்கையோடும், வாழ்வாதாரத்தோடும் சம்பந்தப்பட்ட கோரிக்கை என்பதால் இலவச அரிசி திட்டத்தை செயல்படுத்த முயற்சி மேற்கொண்டோம்.

தில்லியில் பிரதமா் நரேந்திர மோடியை சந்தித்து இந்தக் கோரிக்கையை விளக்கினேன். இந்த கோரிக்கையின் நியாயத்தை பிரதமா் ஏற்று, உடனே அனுமதி தந்தாா்.

நியாயவிலைக் கடைகள் தொடா்ந்து செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும். தீபாவளி பரிசாக மாநில அரசின் இலவச அரிசி திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும். வீடு தேடி இலவச அரிசியைக் கொண்டு சோ்க்கவும் பரிசீலிக்கப்படுகிறது. முதல்வரிடம் பேசி அதற்கான சாத்தியங்கள் குறித்து ஆராய்ந்து செயல்படுத்தப்படும் என்றாா்.