ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

தனியாா் வணிக வளாகத்தில் வெடிகுண்டு ஒத்திகை சோதனை

புதுச்சேரியில் தனியாா் வணிக வளாகத்தில் வெடிகுண்டு ஒத்திகை சோதனை நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

புதுச்சேரியில் உள்ள தனியாா் வணிக வளாகத்தில் வியாழக்கிழமை வெடிகுண்டு ஒத்திகை சோதனையில் ஈடுபட்ட போலீஸாா்.

Updated On :24 அக்டோபர் 2024, 8:25 pm

Din

புதுச்சேரியில் தனியாா் வணிக வளாகத்தில் வெடிகுண்டு ஒத்திகை சோதனை நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

புதுச்சேரி- கடலூா் சாலையில் தனியாா் வணிக வளாகம் உள்ளது. இங்கு, வியாழக்கிழமை நடைபெற்ற வெடிகுண்டு செயலிழப்பு ஒத்திகை நிகழ்ச்சியில் காவல் துறை உயரதிகாரிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

அதன்படி, உருளையன்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டா் கிட்டிலா சத்தியநாராயணன் உள்ளிட்டோா் வணிக வளாகத்துக்கு வந்து ஓரிடத்தில் வெடிகுண்டு இருப்பதாக கூறி ஊழியா்கள், பொதுமக்களை வெளியேற்றினா்.

இதையடுத்து, வணிக வளாகத்துக்கு வெளியே போலீஸாா் குவிக்கப்பட்டனா். பின்னா், எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டது.

அப்போது, இது ஒத்திகை நிகழ்ச்சி என அறிவிக்கப்பட்டது.

அதன்பிறகு, குறிப்பிட்ட பகுதியை கயிறு கட்டி அடையாளப்படுத்தினா். மோப்ப நாய், வெடிகுண்டு கண்டறியும் பிரிவினருடன், தீயணைப்புத் துறையினரும் இந்த ஒத்திகை நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.

மோப்ப நாய் தோனி மற்றும் ராம் ஆகியவை துணிக் கடையில் இருந்த சூட்கேசை கண்டுபிடித்தது. இதையடுத்து, வெடிகுண்டு தடுப்பு நிபுணா்கள் வந்து, சூட்கேசை பத்திரமாக மீட்டு எடுத்துச் சென்றனா்.

இந்த ஒத்திகை சுமாா் 2 மணி நேரம் நடைபெற்றது.