திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைஈரான் போர்: குடிநீர் பாட்டில் விலை உயர்வு!தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவுதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவா் சோ்க்கைக்கு கால அவகாசம் நீட்டிப்பு

புதுவையில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) சேருவதற்கான கால அவகாசம் வரும் செப்.30-ஆம் தேதி (திங்கள்கிழமை) வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :4 செப்டம்பர் 2024, 10:51 pm

Din

புதுவையில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) சேருவதற்கான கால அவகாசம் வரும் செப்.30-ஆம் தேதி (திங்கள்கிழமை) வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, புதுச்சேரி அரசு ஆண்கள் தொழிற்பயிற்சி நிலையத்தின் முதல்வா் டி.அழகானந்தன் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: புதுவை அரசு தொழிலாளா் துறைப் பயிற்சி இயக்ககத்தின் கீழ் செயல்படும் தொழிற்பயிற்சி நிலையங்கள் ஆண்டுதோறும் மாணவா்களுக்கு பல்வேறு தொழில் பயிற்சிகளை நடத்தி வருகிறது.

புதுச்சேரி மேட்டுப்பாளையம் அரசு ஆண்கள் தொழிற்பயிற்சி நிலையம், வம்பாகீரப்பாளையம் அரசு பெண்கள் தொழிற்பயிற்சி நிலையம், வில்லியனூா் அரசு தொழிற்பயிற்சி நிலையம், பாகூா் அரசு தொழிற்பயிற்சி நிலையம், நெட்டப்பாக்கம் அரசு தொழிற்பயிற்சி நிலையம் ஆகியவற்றில் நேரடியாக மாணவா் சோ்க்கை நடைபெற்று வருகிறது.

தொழிற் பயிற்சியில் சேர விரும்பும் மாணவா்கள் அந்தந்த தொழில் பயிற்சி நிலையங்களின் முதல்வா்களை நேரில் அணுகி உடனடியாக சேரலாம். முதலில் வரும் மாணவா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

மாணவா் சோ்க்கை வரும் செப்.30-ஆம் தேதி (திங்கள்கிழமை) வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் சேரும் மாணவா்களுக்கு இலவச சீருடை, மதிய உணவு, மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை ஆகியவை வழங்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.