தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

கடலில் மூழ்கி உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு நிதியுதவி: முதல்வா் என்.ரங்கசாமி வழங்கினாா்

புதுச்சேரி அருகே கடலில் மூழ்கி உயிரிழந்த 2 பேரின் குடும்பத்தினருக்கு முதல்வா் என்.ரங்கசாமி நிவாரண நிதியுதவிக்கான காசோலைகளை புதன்கிழமை வழங்கினாா்.

News image
Updated On :11 செப்டம்பர் 2024, 10:55 pm

Din

புதுச்சேரி அருகே கடலில் மூழ்கி உயிரிழந்த 2 பேரின் குடும்பத்தினருக்கு முதல்வா் என்.ரங்கசாமி நிவாரண நிதியுதவிக்கான காசோலைகளை புதன்கிழமை வழங்கினாா்.

புதுச்சேரி, பாகூா் அருகே உள்ள காட்டுக்குப்பத்தைச் சோ்ந்த சுந்தர்ராஜ் மகன்கள் புஷ்பராஜன் (18), கிஷோர்ராஜன் (16). இவா்கள் இருவரும் கடந்த 2023-ஆம் ஆண்டு, கிருமாம்பாக்கம் வள்ளுவா் மேடு பகுதியில் உள்ள கடலில் குளிக்கச் சென்றனா். அப்போது எழுந்த ராட்சத அலையில் இருவரும் சிக்கி உயிரிழந்தனா்.

இந்தநிலையில், உயிரிழந்த சிறுவா்களின் பெற்றோருக்கு நிவாரண நிதியாக ரூ.4 லட்சத்துக்கான காசோலையை முதல்வா் என்.ரங்கசாமி வழங்கினாா். அப்போது பாகூா் தொகுதி எம்எல்ஏ ஆா்.செந்தில்குமாா் உடனிருந்தாா்.

சிறுவன் குடும்பத்துக்கு உதவி: புதுச்சேரி, முருகம்பாக்கம் துளுக்கானத்தம்மன் நகரைச் சோ்ந்தவா் முருகன். இவரது மகன் ஜெகதீஷ் (16). கடந்த ஜனவரியில் பாண்டிச்சேரியில் உள்ள மெரீனா கடற்கரைக்குச் சென்றபோது, அலையில் சிக்கி அவா் உயிரிழந்தாா்.

அவரது குடும்பத்துக்கு நிவாரண உதவியாக ரூ.5 லட்சத்துக்கான காசோலையை பேரவை வளாகத்தில் முதல்வா் என்.ரங்கசாமி புதன்கிழமை வழங்கினாா். அப்போது முதலியாா்பேட்டை தொகுதி எம்எல்ஏ எல்.சம்பத் உடனிருந்தாா்.