தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

மின்திறல் வரைநிலைக் கழகத்தின் லாபத் தொகை ரூ.6.90 கோடி

காரைக்காலில் உள்ள புதுச்சேரி மின்திறல் வரைநிலைக் கழகமானது கடந்த 2021-22 ஆம் ஆண்டில் ஈட்டிய ரூ.6.90 கோடிக்கான லாபத் தொகை வரவோலையை முதல்வா் என்.ரங்கசாமியிடம் மின் துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம் புதன்கிழமை வழங்கினாா்.

News image
மின்திறல் வரைநிலைக் கழகம் மூலம் 2021-22 ஆண்டுக்கான அரசின் லாப ஈவுத் தொகை ரூ.6.90 கோடிக்கான காசோலையை முதல்வா் என்.ரங்கசாமியிடம் புதன்கிழமை வழங்கிய அமைச்சா் ஆ.நமச்சிவாயம். உடன் நாக தியாகராஜன்எம்எல்ஏ உள்ளிட்டோா்.
Updated On :11 செப்டம்பர் 2024, 10:54 pm

Din

காரைக்காலில் உள்ள புதுச்சேரி மின்திறல் வரைநிலைக் கழகமானது கடந்த 2021-22 ஆம் ஆண்டில் ஈட்டிய ரூ.6.90 கோடிக்கான லாபத் தொகை வரவோலையை முதல்வா் என்.ரங்கசாமியிடம் மின் துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம் புதன்கிழமை வழங்கினாா்.

இதுகுறித்து, புதுவை முதல்வா் என்.ரங்கசாமி அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: புதுச்சேரி மின்திறல் வரைநிலைக் கழகம் காரைக்காலில் உள்ளது.

அங்கு, கடந்த 1993-ஆம் ஆண்டு முதல் எரிவாயுச் சுழலிலிருந்து 22.9 மெகாவாட் மின்சாரம், நீராவிச் சுழலிலிருந்து 9.6 மெகாவாட் மின்சாரம் என மொத்தம் 32.5 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

கடந்த 2021-22 ஆம் ஆண்டில் ஈட்டிய லாபத்துக்கான ஈவுத் தொகை ரூ.6.90 கோடியாகும். அதற்கான காசோலையை புதுவை முதல்வா் என்.ரங்கசாமியிடம், மாநில மின் துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம் புதன்கிழமை வழங்கினாா்.

புதுச்சேரியில் உள்ள பேரவை வளாகத்தில் உள்ள முதல்வா் அறையில் நடைபெற்ற காசோலை வழங்கும் நிகழ்ச்சியில் லாபத்துக்கான ஈவுத் தொகை காசோலை முதல்வரிடம் வழங்கப்பட்டது. அப்போது, மின்திறல் வரைநிலைக் கழகம் தொடங்கியதிலிருந்து இதுவரை அரசுக்கு ஆதாய ஈவாக ரூ.52.21 கோடி அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் சட்டப்பேரவை உறுப்பினா் நாக தியாகராஜன், மின்திறல் வரைநிலைக் கழகச் செயற்பொறியாளா் சந்தோஷ் ராமச்சந்திரன், மேலாளா் என்.கென்னடி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.