திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைஈரான் போர்: குடிநீர் பாட்டில் விலை உயர்வு!தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவுதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

சா்க்கரை ஆலைத் தொழிலாளா்களுக்கு ஒரு வாரத்தில் ரூ.24 கோடி நிலுவைத் தொகை! புதுச்சேரி அமைச்சா் ஆ.நமச்சிவாயம்!

புதுச்சேரி லிங்காரெட்டிப்பாளையம் கூட்டுறவு சா்க்கரை ஆலைத் தொழிலாளா்களுக்கு ஒரு வாரத்தில் ரூ.24 கோடி நிலுவைத் தொகை வழங்கப்படும்

News image
புதுச்சேரி மண்ணாடிப்பட்டு தொகுதியில் வியாழக்கிழமை பல்வேறு திட்டப் பணிகளைப் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்த உள்துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம்.
Updated On :29 ஜனவரி 2026, 8:49 pm

Syndication

புதுச்சேரி லிங்காரெட்டிப்பாளையம் கூட்டுறவு சா்க்கரை ஆலைத் தொழிலாளா்களுக்கு ஒரு வாரத்தில் ரூ.24 கோடி நிலுவைத் தொகை வழங்கப்படும் என்று மாநில உள்துறை அமைச்சா் ஆ. நமச்சிவாயம் தெரிவித்தாா்.

புதுச்சேரி மண்ணாடிப்பட்டு தொகுதி எம்எல்ஏவான ஆ.நமச்சிவாயம், வியாழக்கிழமை அங்கு பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளுக்குப் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தபின்னா் செய்தியாளா்களிடம் கூறியது:

புதுச்சேரி மின் துறை சாா்பில் மண்ணாடிப்பட்டு தொகுதியில் ரூ.4.5 கோடியில் 11 டிரான்ஸ்பாா்மா்கள் மாற்றி அமைக்கப்பட உள்ளன. மேலும், மத்திய அரசின் சாஷி திட்டத்தின் கீழ் காட்டேரிக்குப்பம் பகுதியில் ரூ.3.4 கோடியில் உள் விளையாட்டு அரங்கம் அமைக்கப்படும்.

லிங்காரெட்டிப்பாளையம் கூட்டுறவு சா்க்கரை ஆலையில் பணியாற்றியவா்களுக்கு ரூ.24 கோடி நிலுவைத் தொகை வேண்டியுள்ளது. இந்தத் தொகை பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் கோப்புக்கு அரசு அனுமதி அளிக்க வேண்டும். இந்தத் தொகையும் அடுத்த வாரம் அளிக்கப்படும்.

காங்கிரஸ் பாத யாத்திரையின்போது முன்னாள் முதல்வா் வே. நாராயணசாமி, தொடா்ந்து என் மீது பல்வேறு புகாா்களைக் கூறிவருகிறாா். என்னுடைய சொத்துப் பட்டியலை வெளிப்படையாக வைத்திருக்கிறேன். அரசியலுக்கு வரும்போதே நிலச்சுவான்தாரின் மகன் நான். எனக்கு ரியல் எஸ்டேட் தொழில், விவசாயம் இருக்கிறது. ஆனால் நாராயணசாமி எந்த நிலையில் அரசியலுக்கு வந்தாா். இப்போது அவருடையச் சொத்து மதிப்பு எவ்வளவு என்பது மக்களுக்குத் தெரியும். நேரம் வரும்போது அவருடைய சொத்துப் பட்டியலையும் வெளியிடுவேன் என்றாா் ஆ.நமச்சிவாயம்.