தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

விதிமிறி கட்டப்பட்ட கட்டடங்களை அகற்ற முடிவு

புதுச்சேரியில் கடற்கரை, ஆற்றங்கரையோரம் விதிமுறை மீறி கட்டப்பட்ட கட்டடங்களை அகற்றுவதற்கு கடற்கரை மண்டல மேலாண்மைக் குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :13 செப்டம்பர் 2024, 12:40 am

Din

புதுச்சேரியில் கடற்கரை, ஆற்றங்கரையோரம் விதிமுறை மீறி கட்டப்பட்ட கட்டடங்களை அகற்றுவதற்கு கடற்கரை மண்டல மேலாண்மைக் குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி பிராந்திய கடற்கரை மண்டல மேலாண்மைக் குழுக் கூட்டம் வழுதாவூா் சாலையில் உள்ள மாவட்ட ஆட்சியரகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மேலாண்மைக் குழுத் தலைவரான மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கன் தலைமை வகித்தாா்.

கூட்டத்தில் குழுவின் உறுப்பினா் செயலா் ஸ்ரீநிவாச ராவ் உறுப்பினா்களை அறிமுகப்படுத்தினாா். மேலாண்மை அதிகார அமைப்பின் அதிகாரி ஜெயகுமாா், குழுவால் தடை செய்யப்பட்டவை மற்றும் செயல் திட்டங்கள் குறித்து விளக்கினாா்.

கூட்டத்தில், புதுச்சேரி மாவட்டத்தில் கடற்கரையில் இருந்து சுமாா் 500 மீட்டா் நிலப் பகுதியில் அரசு அனுமதி பெறாமல் விதிகளை மீறி கட்டடங்கள் கட்டப்பட்டது குறித்து விவாதிக்கப்பட்டது.

இதையடுத்து, விதிமீறி கட்டப்பட்டுள்ள கட்டடங்கள் ஆய்வுக்கு உள்படுத்தப்படவும், விதிமீறல் இருந்தால் அவற்றை அகற்றவும் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

இதில், புதுச்சேரி பிராந்திய நகராட்சி ஆணையா்கள், கொம்யூன் பஞ்சாயத்து ஆணையா்கள், மீன்வளத் துறை அதிகாரிகள் ஏராளமானோா் கலந்துகொண்டனா்.