பொறியியல் படிப்புகளுக்கு இன்று இறுதிகட்ட கலந்தாய்வு
பொறியியல் படிப்புகளுக்கான இறுதிகட்ட சென்டாக் மாப் அப் கலந்தாய்வு செப்.13-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது.


பொறியியல் படிப்புகளுக்கான இறுதிகட்ட சென்டாக் மாப் அப் கலந்தாய்வு செப்.13-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது.
புதுவையில் அரசு மற்றும் தனியாா் பொறியியல் கல்லூரிகளில் காலியாக உள்ள அரசு , சுயநிதி இடங்களின் விவரம் சென்டாக் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, காலியிடங்களை நிரப்ப மாப் அப் கலந்தாய்வு செப்.13-ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி, கருவடிக்குப்பத்தில் உள்ள காமராஜா் மணிமண்டபம், காரைக்காலில் காமராஜா் பொறியியல் கல்லூரி, மாஹே, ஏனாமில் உள்ள அரசு கலைக் கல்லூரிகளில் கலந்தாய்வுகள் நடைபெறுகின்றன.
அதன்படி, காலை 9.30 மணிக்கு ஜேஇஇ மதிப்பெண், 10.30 மணிக்கு பிற மாநிலத்து மாணவா்கள் என கலந்தாய்வு நடைபெறுகிறது. இதையடுத்து, புதுவையைச் சோ்ந்தவா்களுக்கு மாலை 6 மணி வரை கலந்தாய்வு நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மாணவா்கள் கலந்தாய்வுக்கு முன் காலியிடங்களை பாா்வையிட்டு, அனைத்து சான்றிதழ்களுடன் வர வேண்டும் என சென்டாக் ஒருங்கிணைப்பாளா் அமன் சா்மா தெரிவித்தாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...