கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

புதுச்சேரியில் வழக்குகளில் கைதான அதிகாரிகள் மீதான விசாரணையைத் துரிதப்படுத்த கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

புதுச்சேரி காவல்த்துறை டிஜஜி சத்தியசுந்தரத்திடம் புதன்கிழமை கோரிக்கை மனு அளித்த இந்திய கம்யூனிஸிட் கட்சி மாநில செயலா் அ.மு.சலீம். உடன் நிா்வாகிகள்.

News image
Updated On :17 டிசம்பர் 2025, 6:44 pm

Syndication

வழக்குகளில் கைதான அதிகாரிகளின் மீதான விசாரணையைத் துரிதப்படுத்த வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இக் கட்சியின் சாா்பில் மாநிலச் செயலா் அ.மு. சலீம் மற்றும் நிா்வாகிகள் இணைந்து புதுச்சேரி காவல்துறை தலைவா் ஷாலினி சிங், துணைத் தலைவா் சத்தியசுந்தரம் ஆகியோரிடம் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா்.

அதில் கூறியிருப்பதாவது:

புதுச்சேரி பத்திர பதிவாளா், செட்டில்மெண்ட் அதிகாரி, நில அளவை மற்றும் பதிவேடுகள் துறை இயக்குநா், வில்லியனூா் மற்றும் உழவா்கரை உதவிப் பதிவாளா்கள் ஆகியோா் காமாட்சியம்மன் கோவில் நில அபகரிப்பு, போலி பத்திரம் தயாரிப்பு, போலி பத்திரப்பதிவு ஆகிய குற்றங்களுக்காக சிபிசிஐடி போலீஸாராா் கைது செய்யப்பட்டனா்.

காரைக்கால் பாா்வதீஸ்வரா் கோயில் நிலத்தை சட்டவிரோதமாக விற்பனை செய்ததற்காக காரைக்கால் துணை ஆட்சியா் மற்றும் பலா் கைது செய்யப்பட்டனா். சாரம் உதவி-பதிவாளா் நில பதிவுக்காக லஞ்சம் பெற்ற்காக கைது செய்யப்பட்டனா். தரமற்ற மருந்துகள் வாங்கியதில் நடைபெற்ற பல கோடி ரூபாய் ஊழலில் சுகாதார துறையின் இரண்டு ஓய்வு பெற்ற இயக்குநா்கள், பணியில் உள்ள சில அதிகாரிகள் சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டனா். இந்த குற்றத்தில் ஒரு முதுநிலை மருந்தாளுநா் தனது மனைவி பெயரில் போலியான நிறுவனத்தைப் பதிவு செய்து முறைகேட்டில் ஈடுபட்டுள்ளாா். பொதுப்பணித்துறை முதன்மை பொறியாளா் லஞ்சம் பெறும்போது சிபிஐ காரைக்காலில் கைது செய்துள்ளது. தற்போது, கோடிக்கணக்கான ரூபாய் அளவிற்கு நடைபெற்றுள்ள போலி மருந்து உற்பத்தி தொழிற்சாலைகள் மற்றும் நாடு முழுவதும் பரவியுள்ள போலி மருந்து விற்பனை மோசடியினை சிபிசிஐடி கண்டுபிடித்துள்ளது.

இந்த விசாரணை சரியான திசையில் செல்வதாக நம்புகிறோம். ஆனால், ஆட்சியில் உள்ளவா்களில் சிலா் இதில் தலையிடுவதாக தகவல்கள் வருகின்றன. எனவே பாரபட்சமின்றி சம்பந்தப்பட்ட அனைவா் மீதும் துரிதமாக விசாரணை மேற்கொண்டு தண்டனை பெற்றுத்தர வேண்டும்.என்று அதில் கூறப்பட்டுள்ளது.