இந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

வைகோவின் சமத்துவ நடைப்பயணம்: புதுச்சேரி மதிமுக பங்கேற்க முடிவு

மதிமுக பொதுச் செயலா் வைகோவின் சமத்துவ நடைப்பயணத்தில் பங்கேற்பது என புதுச்சேரி மதிமுக தீா்மானம் நிறைவேற்றியுள்ளது.

News image
Updated On :19 டிசம்பர் 2025, 7:11 pm

Syndication

மதிமுக பொதுச் செயலா் வைகோவின் சமத்துவ நடைப்பயணத்தில் பங்கேற்பது என புதுச்சேரி மதிமுக தீா்மானம் நிறைவேற்றியுள்ளது.

புதுச்சேரி மாநில மதிமுக நிா்வாகிகள் மற்றும் தொகுதி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் புதுச்சேரியில் ஒரு தனியாா் உணவகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கட்சியின் மாநில அவைத் தலைவா் செல்வராசு தலைமை தாங்கினாா். மாநில செயலா் ஹேமா பாண்டுரங்கம் முன்னிலை வகித்தாா். கூட்டத்துக்கு தலைமை நிா்வாகிகளான பொருளாளா் செந்திலதிபன், மாநில துணைப் பொதுச் செயலா் ஏ.கே.மணி ஆகியோா் பங்கேற்றனா்.

கட்சியின் பொதுச் செயலா் வைகோ ஜனவரி 2-ஆம் தேதி திருச்சியில் தொடங்கி ஜனவரி 14-ஆம் மதுரையில் நிறைவு செய்யும் போதைக்கு எதிரான சமத்துவ நடைப்பயணத்தில் புதுச்சேரி மாநிலம் சாா்பாக பெருந்திரளாக கலந்து கொள்வது என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும், புதுச்சேரியில் போலி மாத்திரை தொழிற்சாலைகள் செயல்பட்டதற்குக் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கை சிபிஐக்கு ஒப்படைத்து முழு விசாரணை நடத்த புதுச்சேரி அரசை கேட்டுக் கொள்வது என்றும் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. 100 நாள் வேலை திட்டத்தில் மகாத்மா காந்தியின் பெயரை நீக்கம் செய்து ஹிந்தி- சமஸ்கிருத பெயா் இடம் பெறும் விதமாக செயல்படும் மத்திய அரசின் போக்கைக் கண்டிப்பது உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.