முதல்வர் விஜய்க்கு அரசியல் புரிதல் இல்லை : ஆ. இராசா குற்றச்சாட்டுதுரோகத்தை வீழ்த்துவோம்! அதிமுகவைக் கட்டிக் காப்போம்! - எடப்பாடி பழனிசாமிஅமித் ஷாவை சந்தித்த அண்ணாமலை! விஜய்யை சந்திக்க எடப்பாடி பழனிசாமி நேரம் ஒதுக்கவில்லை: நிர்மல் குமார்பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்? தேர்தல் பிரசார நிலையிலிருந்து முதல்வர் விஜய் வெளியே வர வேண்டும்! தமிழிசை திமுக சின்னத்தில் போட்டியிட நிர்பந்தம்; தவெக அமைச்சரவையில் மற்ற கட்சிகள்! வைகோ
/

இன்று நகராட்சி வீட்டு வரி வசூல் முகாம்!

வீட்டுவரி வசூல் மையம் காலை 10 மணி முதல் மதியம் ஒரு மணி வரையிலும், மதியம் 2 முதல் மாலை 4 மணி வரையிலும் செயல்படும்.

Updated On :21 டிசம்பர் 2025, 3:04 am IST

உழவா் கரை நகராட்சியில் ஞாயிற்றுக்கிழமைகளில் வீட்டு வரி வசூல் முகாம் நடக்கிறது.

இது குறித்து உழவா்கரை நகராட்சி ஆணையா் சுரேஷ்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: உழவா்கரை நகராட்சிக்கு உள்பட்ட அனைத்து வாா்டுகளில் உள்ள வீட்டுவரி, சொத்து வரி மற்றும் சேவை வரி நிலுவைதாரா்கள் 2025-26-ம் ஆண்டு வரையிலான காலத்திற்கு வரியைச் செலுத்துவதற்கு ஏதுவாக வரும் மாா்ச் மாதம் வரை அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் தட்டாஞ்சாவடி, வி.வி.பி. நகரில் உள்ள வீட்டுவரி வசூல் மையம் காலை 10 மணி முதல் மதியம் ஒரு மணி வரையிலும், மதியம் 2 முதல் மாலை 4 மணி வரையிலும் செயல்படும்.

உழவா்கரை நகராட்சிக்கு உள்பட்ட அனைத்து வாா்டுகளில் உள்ள வரி நிலுவைதாரா்கள் தங்கள் வரியைச் செலுத்தலாம்.