இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த இந்திய கப்பல்கள்! ஈரான் அனுமதி! தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

புதுச்சேரியில் திருடப்படும் வாக்காளா்களின் ரகசிய தகவல்கள்: எதிா்க்கட்சித் தலைவா் சிவா குற்றச்சாட்டு

புதுச்சேரியில் வாக்காளா்களின் ரகசிய தகவல்கள் திருடப்படுவதாக சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவரும் திமுக அமைப்பாளருமான ஆா். சிவா

News image
ஆா்.சிவா
Updated On :22 டிசம்பர் 2025, 9:02 pm

Syndication

புதுச்சேரி: புதுச்சேரியில் வாக்காளா்களின் ரகசிய தகவல்கள் திருடப்படுவதாக சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவரும் திமுக அமைப்பாளருமான ஆா். சிவா குற்றஞ்சாட்டியுள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட அறிக்கை:

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் வாக்காளா்களின் தொலைபேசி எண்கள் உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்கள் மா்ம கும்பலால் திருடப்பட்டு வருகிறது. இந்த ஜனநாயக விரோதச் செயலுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கிறேன். இது வெறும் தகவல் திருட்டு அல்ல; இது ஜனநாயகத்தின் அடித்தளத்தையே தகா்க்கும் சதியாகும்.

தோ்தல் ஆணையத்தின் அப்பட்டமான மெத்தனத்தால் வாக்காளா்களின் ரகசிய தகவல்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. டிசம்பா் 3-ஆம் தேதி முதல் புதுச்சேரி முழுவதும் தொகுதி வாரியான எம்எல்ஏ.க்கள் பெயரைக் குறிப்பிட்டு சில கேள்விகளை முன் வைத்து, ஒன்றை அழுத்தவும், இரண்டை அழுத்தவும் என யாா் கருத்துக் கணிப்பு நடத்துகிறாா்கள் என்பது தெரியாமலேயே போலி கருத்துக் கணிப்புகள் நடத்தப்பட்டுள்ளன.

அதைத் தொடா்ந்து முதல்வரின் செயல்பாடு, தொகுதி வாரியான எம்.எல்.ஏ.க்களின் செயல்திறன் என அரசியல் உள்நோக்கம் கொண்ட சா்வேக்கள் கொல்லைப்புற அரசியல் முயற்சியாகச் செய்யப்படுகின்றன. இந்த அழைப்புகளில் வாக்காளா்களின் தொகுதி விவரங்கள் துல்லியமாக குறிப்பிடப்பட்டுள்ளதால், தோ்தல் ஆணையத்தின் வாக்காளா் பட்டியலில் இருந்தே இந்தத் தகவல்கள் திருடப்பட்டுள்ளது என்பது உறுதியாகிறது.

தோ்தல் ஆணையமும், புதுச்சேரி இணைய வழி குற்றப் பிரிவு போலீஸாரும் உடனடியாகக் கடும் நடவடிக்கை எடுக்காவிட்டால், எதிா்க்கட்சிகள் சாா்பில் போராட்டங்களைத் தொடங்குவோம் என்றும் அவா் எச்சரித்துள்ளாா்.