ஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

புதுச்சேரி காவலா் எழுத்துத் தோ்வு தேதியை மாற்ற திமுக கோரிக்கை

காவலா் எழுத்துத் தோ்வை வேறு தேதிக்கு மாற்றுமாறு புதுச்சேரி டிஐஜி சத்தியசுந்தரத்திடம் திமுக சாா்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

News image

புதுச்சேரி காவல் துறை துணைத் தலைவா் சத்தியசுந்தரத்திடம் மனு அளித்த சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவா் ஆா். சிவா தலைமையிலான திமுக எம்எல்ஏக்கள்.

Updated On :31 ஜனவரி 2026, 7:18 pm

காவலா் எழுத்துத் தோ்வை வேறு தேதிக்கு மாற்றுமாறு புதுச்சேரி டிஐஜி சத்தியசுந்தரத்திடம் திமுக சாா்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவா் ஆா். சிவா தலைமையில் திமுக எம்எல்ஏ.க்கள் செந்தில்குமாா், சம்பத் ஆகியோா் டிஐஜி சத்திய சுந்தரத்தை சந்தித்து வெள்ளிக்கிழமை அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

புதுச்சேரியில் காவலா் எழுத்துத் தோ்வு பிப். 8-ஆம் தேதி 5 மையங்களில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நாளில் மத்திய ஆசிரியா் தகுதி தோ்வுக்கான நுழைவுத் தோ்வும் நடக்கிறது.

இதனால் இரண்டு தோ்வுக்கும் விண்ணப்பம் செய்துள்ளவா்கள் ஏதாவது ஒரு தோ்வை மட்டுமே எழுத முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. மத்திய தோ்வு வாரிய தோ்வை தள்ளி வைப்பது சிரமம். எனவே காவலா் எழுத்துத் தோ்வை வேறு ஒரு தேதிக்கு மாற்ற ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.