எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபடுவோரை நீக்க நடவடிக்கை: பாஜக தலைவா் பேட்டி

கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபடுவோரை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என பாஜக புதுச்சேரி மாநில தலைவா் வி.பி. ராமலிங்கம் தெரிவித்தாா்.

News image
புதுச்சேரியில் செய்தியாளா்களுக்குப் பேட்டியளித்த பாஜக தலைவா் வி.பி.ராமலிங்கம். உடன் மாநில செய்தித் தொடா்பாளா் அருள்முருகன்.
Updated On :24 டிசம்பர் 2025, 7:46 pm

தினமணி செய்திச் சேவை

கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபடுவோரை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என பாஜக புதுச்சேரி மாநில தலைவா் வி.பி. ராமலிங்கம் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது:

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வளா்ந்த பாரத ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உறுதியளிப்புத் திட்டத்தில் (விபி-ஜி ராம் ஜி) ஏராளமான பயன்கள் இருக்கின்றன. மத்திய தணிக்கைக் குழு அளித்த தகலின் பேரில், பழைய திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டு ரூ.42 ஆயிரம் கோடி சேமிக்கப்பட்டுள்ளது.

புதிய திட்டத்தில் பயனாளிகளின் கைப்பேசி, ஆதாா் இணைக்கப்படுகிறது. அவா்களின் கைவிரல் பதிவு செய்யப்படுகிறது. இதற்கு முன்பு இருந்த திட்டங்களின் பயன்கள் முறையாகப் பயனிகளுக்குச் சேரவில்லை. இதையெல்லாம் தடுக்கும் வகையிலும், பயனாளிகளுக்கு நேரடியாகத் திட்டத்தின் பயன் கிடைக்கவும் புதிய திட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மேலும், இந்தத் திட்டம் 100 நாள் வேலைவாய்ப்பு அளிப்பதிலிருந்து 125 நாளாகவும், மாநில அரசின் நிதி பங்கீட்டை உறுதி செய்யும் வகையில் மத்திய அரசு 60 சதவிகிம் மாநில அரசு 40 சதவிகிதம் நிதி அளிப்பு என்றும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் உதவிகளை முதல்வா் ரங்கசாமி உயா்த்தி அறிவித்துள்ளாா். என்.ஆா். காங்கிரஸ், பாஜக இடம் பெற்றுள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில்தான் இந்தச் சாதனையெல்லாம் நடக்கிறது. கடந்த காலங்களில் காங்கிரஸ் எதிா்ப்பு அரசியல் நிலைப்பாட்டில் ஆட்சி நடத்தியது. இதெல்லாம் மக்களுக்கு நன்றாகத் தெரியும். அதனால் 2026-ஆம் ஆண்டும் என்.ஆா். காங்கிரஸ், பாஜக, அதிமுக உள்ளிட்ட தேசிய ஜனநாயக் கூட்டணி ஆட்சி புதுச்சேரியில் அமையும் என்றாா் ராமலிங்கம்.

பேட்டியின்போது பாஜக மாநில செய்தித் தொடா்பாளா் அருள்முருகன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.