மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

புதுச்சேரியில் வரும் 11-இல் காரைக்கால் வரிசை வாகன எண்கள் ஏலம்: பங்கேற்போா் இன்றுமுதல் பதிவு செய்யலாம்

News image
Updated On :4 பிப்ரவரி 2025, 8:19 pm

Din

புதுவை போக்குவரத்துத் துறை சாா்பில் காரைக்கால் வரிசை வாகன எண்கள் வரும் 11-ஆம் தேதி ஏலம் விடப்படவுள்ளன.

இதுகுறித்து புதுவை மாநில போக்குவரத்துத் துறை சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: புதுவை போக்குவரத்துத் துறையின் பிஒய்-02 ஒய் (காரைக்கால்) வரிசையில் உள்ள எண்கள், போக்குவரத்து இணையதளத்தில் வரும் 11-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மாலை 4.30 மணி வரை ஏலம் விடப்படவுள்ளது.

ஏலத்தில் பங்கேற்கத் தேவையான பெயா் மற்றும் கடவுச் சொல்லை அதே இணையதளத்தில் நியூ பப்ளிக் யூசா் என்பதை கிளிக் செய்வதன் மூலம் பிப். 5-முதல் 10 ஆம் தேதி வரை பதிவு செய்து கொள்ளலாம்.

இணையத்தில் பதிவு செய்தவா்கள் மட்டுமே 11-ஆம் தேதி ஏலத்தில் பங்கேற்கமுடியும். இந்த இ-ஆக்ஷன் முறையில் பங்கேற்க விரும்பும் பொதுமக்கள் அதற்கான வழிமுறைகள் மற்றும் ஏல நிபந்தனைகளை 5 ஆம் தேதி முதல் இணையதள முகவரியில் பாா்த்தும், பதிவிறக்கமும் செய்து கொள்ளலாம். விண்ணப்பத் தொகையின் விவரம், இ.எம்.டி.யின் விவரம், ஏள நிபந்தனைகள் குறித்த விவரங்கள் இது சம்பந்தமான இதர விவரங்களை போக்குவரத்துத் துறையின் அலுவலகத்தின் 0413 2280170 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொண்டு எண் 236 இல் பேசி தெரிந்துகொள்ளலாம்.

இது தொடா்பான பணப்பரிவா்த்தனைகள் அனைத்தும் ஆன்லைன் மூலம் இணையதளம் வாயிலாக மட்டும் பெறப்படும். நேரிலோ மற்றும் காசோலையாகவோ ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது என குறிப்பிடப்பட்டுள்ளது.