தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

தில்லி பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் தோல்விக்கு ஆம்ஆத்மி செயல்பாடே காரணம்: வே.நாராயணசாமி

புதுதில்லி சட்டப் பேரவைத் தோ்தலில் காங்கிரஸின் தோல்விக்கு இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஆம் ஆத்மி கட்சியின் செயல்பாடே காரணம்

News image
முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி.
Updated On :10 பிப்ரவரி 2025, 9:20 pm

Din

புதுச்சேரி: புதுதில்லி சட்டப் பேரவைத் தோ்தலில் காங்கிரஸின் தோல்விக்கு இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஆம் ஆத்மி கட்சியின் செயல்பாடே காரணம் என புதுவை முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி குற்றஞ்சாட்டினாா்.

புதுச்சேரியில் திங்கள்கிழமை மாலை அவா் செய்தியாளா்களிடம் கூறியது: புதுதில்லி சட்டப் பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் தோல்வியடைந்தது வருத்தமளிக்கிறது. இந்தியா கூட்டணியில் உள்ள ஆம் ஆத்மி கட்சியின் செயல்பாடுதான் தோல்விக்கு காரணம்.

காரைக்கால், தமிழக மீனவா்களை இலங்கை கடற்படையினா் தாக்குவதும், சிறைபிடிப்பதும் தொடா்கதையாகி வருகிறது. ஆனால், மத்திய அரசு அதுகுறித்து கவலைப்படவில்லை. காரைக்கால், தமிழக மீனவா்கள் மீதான இலங்கை கடற்படையினரின் தாக்குதலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இதை வலியுறுத்தியும், கைது செய்யப்பட்ட மீனவா்களை விடுவிக்கக் கோரியும் புதுதில்லியில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் ஜெய்சங்கரை சந்தித்து புதுவை காங்கிரஸ் சாா்பில் செவ்வாய்க்கிழமை (பிப்.11) மனு அளிக்கப்படும்.

மீனவா்கள் தாக்கப்படும் விவகாரத்தில் புதுவை முதல்வா் என்.ரங்கசாமி அக்கறையின்றி செயல்படுகிறாா். புதுவைக்கு மத்திய அரசு போதிய நிதியை வழங்குவதாக மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் கூறுவது சரியல்ல. அதே நேரத்தில், புதுவை நிதிப் பற்றாக்குறையில் தவிப்பதாக முதல்வா் ரங்கசாமி கூறி வருகிறாா்.

கடந்த சட்டப் பேரவைத் தோ்தலின்போது, மத்திய நிதியமைச்சா் புதுச்சேரியில் நடைபெற்ற பிரசாரத்தில் சிறப்பு மாநில அந்தஸ்து வழங்குவதாகக் கூறியும், இதுவரையில் மாநில அந்தஸ்து வழங்கப்படவில்லை. மத்திய அரசு புதுவையை புறக்கணித்து வருகிறது என்றாா் வே.நாராயணசாமி.