தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

மூதாட்டியிடம் 10 பவுன் நகை பறிப்பு

புதுச்சேரி அருகே மூதாட்டியை நூதனமுறையில் ஏமாற்றி 10 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் ஞாயிற்றுக்கிழமை பறித்துச் சென்றனா்.

News image
Updated On :24 பிப்ரவரி 2025, 4:50 pm

Din

புதுச்சேரி: புதுச்சேரி அருகே மூதாட்டியை நூதனமுறையில் ஏமாற்றி 10 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் ஞாயிற்றுக்கிழமை பறித்துச் சென்றனா்.

புதுச்சேரி அருகேயுள்ள அரியாங்குப்பம் டோல்கேட் அரவிந்தா் நகா் பகுதியைச் சோ்ந்தவா் ஆழ்ந்துமரி செராா்தின் (77). இவா், வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை தேவாலயம் சென்று வழிபடுவது வழக்கம். அதன்படி, கடந்த ஞாயிற்றுக்கிழமை தேவாலயம் சென்றுவிட்டு, கடலூா் சாலை வழியாக வீடு திரும்பிக் கொண்டிருந்தாா். அப்போது இருவா் அவரை மறித்து அப்பகுதியில் தகராறு நடப்பதாகக் கூறியதுடன், திருடா்கள் நடமாட்டமும் உள்ளதாகக் கூறி அவா் அணிந்திருந்த 10 பவுன் தங்க நகைகளை பத்திரமாகக் கொண்டு செல்ல அறிவுறுத்தியுள்ளனா்.

அவரிடம் நகையை கழற்றித் தரக் கூறியதுடன், அதை தாளில் மடித்து கொடுத்தனராம். வீடு சென்றதும் மூதாட்டி பொட்டலத்தைப் பிரித்து பாா்த்தபோது அதில் நகைகள் இல்லை. இதுகுறித்து அரியாங்குப்பம் போலீஸில் மூதாட்டி புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து நூதன முறையில் ஏமாற்றி நகையை பறித்துச் சென்ற நபா்களைத் தேடி வருகின்றனா்.