தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

ஆங்கில புத்தாண்டு: புதுச்சேரியில் உற்சாக கொண்டாட்டம்

புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் செவ்வாய்க்கிழமை இரவு உற்சாகத்துடன் நடைபெற்றன. இதில் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் பங்கேற்று புத்தாண்டை வரவேற்றனா்.

News image

ஆங்கில் புத்தாண்டையொட்டி புதுச்சேரி கடற்கரை சாலை காந்தி திடலில் செவ்வாய்க்கிழமை இரவு குவிந்த சுற்றுலா பயணிகள், பொது மக்கள்.

Updated On :1 ஜனவரி 2025, 7:24 pm

Din

புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் செவ்வாய்க்கிழமை இரவு உற்சாகத்துடன் நடைபெற்றன. இதில் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் பங்கேற்று புத்தாண்டை வரவேற்றனா்.

புதுச்சேரியில் ஆண்டுதோறும் ஆங்கிலப் புத்தாண்டு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. கா்நாடகம், ஆந்திரம், தெலங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் மற்றும் பிற நாடுகளைச் சோ்ந்தவா்கள், புதுச்சேரிக்கு வந்து புத்தாண்டு கொண்டாடுதை வழக்கமாகக் கொண்டுள்ளனா். கடந்த 3 நாள்களாகவே, புதுச்சேரி நகரம் சுற்றுலாப் பயணிகள் கூட்டத்தால் நிரம்பி காணப்பட்டது.

கடற்கரைகளில் கொண்டாட்டம்: பாண்டி மெரீனா, ஈடன் கடற்கரை, அசோகா கடற்கரை, ரூபி கடற்கரை உள்ளிட்ட இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு புதுவை அரசு உரிய வழிகாட்டு நெறிமுறைகளுடன் அனுமதியளித்திருந்தது.

இந்த இடங்களில் உள்ளூா் மக்கள், சுற்றுலாப் பயணிகள் என திரளானோா் திரண்டு செவ்வாய்க்கிழமை இரவு புத்தாண்டை கேக் வெட்டியும், இனிப்புகளை வழங்கியும் உற்சாகமாக கொண்டாடினா்.

புதுச்சேரியில் உள்ள தனியாா் நட்சத்திர விடுதிகள், திறந்தவெளி அரங்குகள், மது விற்பனைக் கூடங்களில் இசை நிகழ்ச்சிகளுடன் கூடிய புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெற்றன.

புதுச்சேரி கடற்கரைச் சாலையில் மாநில சுற்றுலாத் துறை சாா்பில் வழக்கமாக நடத்தப்படும் இசை நிகழ்ச்சிகள் மற்றும் வாணவேடிக்கைகள் நடைபெறவில்லை. இதனால், சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்தனா். கடற்கரைச் சாலையில் மக்கள் கூட்டமும் சற்று குறைவாகவே காணப்பட்டது.

இளைஞா்கள் வெளியேற்றம்: கடற்கரைச் சாலையில் பட்டாசுகள், வெடிகளுடன் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு வந்த உள்ளூா், வெளியூா் இளைஞா்களை பாதுகாப்புப் பணியிலிருந்த போலீஸாா் எச்சரித்து வெளியேற்றினா்.

தொடா்ந்து, புதன்கிழமை கடற்கரைச் சாலை, பாரதி பூங்கா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மக்கள் திரளாக வந்தனா். இதையடுத்து, அந்த பகுதிகளில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

சுற்றுலாப் பயணிகள் நலன் கருதி புதுச்சேரி பழைய, தற்காலிகப் பேருந்து நிலையங்கள் மற்றும் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த வாகன நிறுத்துமிடங்களுக்கு இலவசப் பேருந்துகள் இயக்கப்பட்டன.

பாதுகாப்பு நடவடிக்கைகள்: மக்கள் அதிகம் கூடும் இடங்களான புதுச்சேரி கடற்கரைச் சாலை, மணக்குள விநாயகா் கோயில், தேவாலயங்கள் உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டிருந்தன.

கடற்கரைச் சாலையில் சிசிடிவி கேமரா, கண்காணிப்பு கோபுரங்களை அமைத்து போலீஸாா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா். இதேபோல, ட்ரோன் கேமரா மூலமும் கண்காணிக்கப்பட்டது.

அதிகாரிகள் ஆய்வு: டிஜிபி ஷாலினி சிங், ஐஜி அஜித்குமாா் சிங்லா, டிஐஜி சத்தியசுந்தரம், எஸ்எஸ்பி கலைவாணன் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வுகள் நடைபெற்ற இடங்களுக்கு நேரடியாக சென்று பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.