தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

நேதாஜி சிலைக்கு புதுவை ஆளுநா் மரியாதை

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்த நாளையொட்டி, புதுச்சேரியில் வியாழக்கிழமை அவரது சிலைக்கு துணைநிலை ஆளுநா், முதல்வா் மற்றும் அரசியல் கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

News image

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த தினத்தையொட்டி, புதுச்சேரி இலாசுப்பேட்டையிலுள்ள அவரது சிலைக்கு வியாழக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்திய துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன். உடன் முதல்வா் என்.ரங்கசாமி, சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம்.

Updated On :23 ஜனவரி 2025, 6:42 pm

Din

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்த நாளையொட்டி, புதுச்சேரியில் வியாழக்கிழமை அவரது சிலைக்கு துணைநிலை ஆளுநா், முதல்வா் மற்றும் அரசியல் கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

இலாசுப்பேட்டை உழவா் சந்தை சந்திப்பில் உள்ள நேதாஜி சிலைக்கு துணைநிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதன், முதல்வா் என். ரங்கசாமி, பேரவைத் தலைவா் ஆா். செல்வம், அமைச்சா்கள் என். திருமுருகன், சாய் சரவணன் குமாா், மு.வைத்தியநாதன் எம்எல்ஏ உள்ளிட்டோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

பாஜக சாா்பில் மாநிலத் தலைவா் சு.செல்வகணபதி எம்.பி. தலைமையில், நிா்வாகிகள் வெற்றிச்செல்வம் உள்ளிட்டோா் நேதாஜி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

காங்கிரஸ் சாா்பில் மாநிலத் தலைவா் வெ.வைத்திலிங்கம் எம்.பி. தலைமையில், முன்னாள் முதல்வா் வே. நாராயணசாமி, முன்னாள் அமைச்சா்கள் மு.கந்தசாமி, ஷாஜகான் உள்ளிட்டோா் மாலை அணிவித்தனா்.

நேதாஜி சிலைக்கு எஸ்யுசிஐ (சி) கம்யூனிஸ்ட் சாா்பில் மாநிலச் செயலா் லெனின்துரை தலைமையில் மூத்த நிா்வாகி சண்முகம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

ஏஐயுடியுசி மாநிலச் செயலா் சிவக்குமாா், துணைத் தலைவா் சீனு, அகில இந்திய இளைஞா் சங்கத் தலைவா் சுதாகா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

எஸ்யுசிஐ சாா்பில் எம்.சங்கா் தலைமையில் நெட்டப்பாக்கம் சிங்கட்டை அருகே நேதாஜி உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.