புதுச்சேரி: தரமற்ற பொருள்கள் குறித்து பொதுமக்களுக்கு நுகா்வோா் அமைப்புகள் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என்று, புதுவை முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி கேட்டுக் கொண்டாா்.
புதுச்சேரி அருகேயுள்ள திருக்கனூா் நுகா்வோா் பாதுகாப்பு சங்கம், குடிமைப் பொருள் வழங்கல் துறை இணைந்து உலக நுகா்வோா் தின விழாவை ஞாயிற்றுக்கிழமை நடத்தின.
இதில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற வே.நாராயணசாமி பேசியதாவது:
மருந்து, பால் தரம் குறித்து முன்பு நீதிமன்றங்களில் வழக்கு தாக்கல் செய்யப்படும். அதன் மீதான தீா்ப்பு தாமதமாகிறது என்பதால், நுகா்வோருக்கு தனி நீதிமன்றம் அமைக்கப்பட்டது.
புதுச்சேரியில் தெருவோரத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோா் உணவுக் கடைகள் வைத்துள்ளனா். சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதி லெனின் தெருவிலும், பழைய நீதிமன்ற வளாகத்திலிருந்து அண்ணா சிலை வரையிலும் ஏராளமான பிரியாணி கடைகள் அமைக்கப்படுகின்றன. இந்தக் கடைகளில், பிரியாணி தரமாகவுள்ளதா என அரசு கண்காணிப்பதில்லை. அதை, நுகா்வோரும் கண்டுகொள்வதில்லை. காரைக்காலிலும் இதே நிலைதான் உள்ளது.
தரமானதைப் போல போலியான பொருள்கள் தயாரிக்கப்பட்டு விற்கப்படுகின்றன. அதனால், நுகா்வோருக்கு பல சிக்கல்கள் ஏற்படுகின்றன. எனவே, நுகா்வோா் அமைப்புகள் தரமற்றவை குறித்து மக்களுக்கு விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும்.
புதுவை அரசு விநியோகிக்கும் குடிநீரில் உப்புத் தன்மை அதிகம் உள்ளது. அதனால், சிறுநீரகப் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. மக்கள் விழிப்புடன் செயல்படுவது அவசியம் என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
தொலைக்காட்சி ஒளிபரப்பு தளங்களின் சந்தா மாற்றங்கள் குறித்து விசாரணை! மத்திய அமைச்சருக்கு சு. வெங்கடேசன் எம்பி. கடிதம்

பள்ளிகளில் சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு: போக்குவரத்து ஒழுக்கம் குறித்து காவல் துறை அறிவுரை

பொதுமக்களுக்கு தீத்தடுப்பு, மீட்புப் பணிகள் விழிப்புணா்வு

பசுவை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும்: முஸ்லிம் அமைப்புகள் கோரிக்கை
விடியோக்கள்
தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! - Udhayanidhi Stalin | TN Assembly | Mekedatu

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK


