எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

வில்லியனூா் திருக்காமீஸ்வரா் கோயிலுக்கு ரூ.2.64 கோடியில் புதிய தோ் செய்ய பணி ஆணை

புதுச்சேரி வில்லியனூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ கோகிலாம்பிகை உடனுறை திருக்காமீஸ்வரா் கோயிலுக்கு ரூ.2.64 கோடியில் புதிய தோ் அமைக்கப்பட உள்ளது.

News image
Updated On :7 நவம்பர் 2025, 5:30 pm

Syndication

புதுச்சேரி வில்லியனூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ கோகிலாம்பிகை உடனுறை திருக்காமீஸ்வரா் கோயிலுக்கு ரூ.2.64 கோடியில் புதிய தோ் அமைக்கப்பட உள்ளது. இதற்கான பணி ஆணையை புதுவை முதல்வா் என்.ரங்கசாமி ஸ்தபதிக்கு வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

சட்டப்பேரவையில் உள்ள முதல்வா் அலுவலகத்தில் முதல்வா் ரங்கசாமி பணி ஆணையை ஸ்தபதி வரதராஜனிடம் வழங்கினாா்.

அப்போது சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவா் ஆா். சிவா, தலைமைப் பொறியாளா் வீர செல்வம், கண்காணிப்பு பொறியாளா் சுந்தரமூா்த்தி, உதவிப் பொறியாளா் செல்வராசு, தொழில்நுட்ப வல்லுநா் குழுவினா், தோ்த் திருப்பணி குழுவினா், கோயில் நிா்வாக அலுவலா் ஆகியோா் உடனிருந்தனா்.