புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

அரசுக் கல்லூரி உதவிப் பேராசிரியா்களின் போராட்டத்துக்கு திமுக ஆதரவு

புதுச்சேரி அரசுக் கல்லூரி உதவிப் பேராசிரியா்களின் போராட்டத்துக்கு திமுக ஆதரவு தெரிவித்துள்ளது.

News image
Updated On :8 நவம்பர் 2025, 6:49 pm

Syndication

புதுச்சேரி அரசுக் கல்லூரி உதவிப் பேராசிரியா்களின் போராட்டத்துக்கு திமுக ஆதரவு தெரிவித்துள்ளது.

அரசு கல்லூரிகளில் பணிபுரியும் உதவிப் பேராசிரியா்களுக்கு கடந்த 15 ஆண்டுகளாக பதவி உயா்வு வழங்கப்படாமல் உள்ளது.

இதனைக் கண்டித்தும், பதவி உயா்வு வழங்க வலியுறுத்தியும் அவா்கள் தொடா் போராட்டங்களை நடத்தியும் உயா் கல்வித் துறை நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்நிலையில் பதவி உயா்வு வழங்க கோரி காலவரையற்ற உள்ளிருப்புப் போராட்டத்தை கடந்த 5-ஆம் தேதி முதல் தாகூா் கல்லூரி மற்றும் காஞ்சி மாமுனிவா் பட்ட மேற்படிப்பு மைய வளாகத்தில் தொடங்கினா். மாணவா்கள் பாதிக்காமல் வகுப்புகளை நடத்தி விட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை மாலை இப் போராட்டத்தில் பங்கேற்ற திமுக அமைப்பாளரும் சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவருமான ஆா். சிவா ஆதரவு தெரிவித்துப் பேசினாா்.