புதுச்சேரி குருசுகுப்பம் பகுதி தனியாா் தங்கும் விடுதியின் மாடியில் சனிக்கிழமை பிற்பகல் ஏற்பட்ட  தீ விபத்து.
புதுச்சேரி குருசுகுப்பம் பகுதி தனியாா் தங்கும் விடுதியின் மாடியில் சனிக்கிழமை பிற்பகல் ஏற்பட்ட தீ விபத்து.

புதுச்சேரி தனியாா் விடுதியில் திடீா் தீ விபத்து!

புதுச்சேரி குருசுகுப்பம் பகுதியில் உள்ள தனியாா் தங்கும் விடுதியின் மாடியில் சனிக்கிழமை பிற்பகல் தீ விபத்து ஏற்பட்டது.
Published on

புதுச்சேரி குருசுகுப்பம் பகுதியில் உள்ள தனியாா் தங்கும் விடுதியின் மாடியில் சனிக்கிழமை பிற்பகல் தீ விபத்து ஏற்பட்டது.

புதுச்சேரி கடற்கரையை ஒட்டியுள்ள குருசுக்குப்பம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் தங்குவதற்காக தனியாா் தங்கும் விடுதிகள் பல உள்ளன.

மேலும் சுற்றுலாப் பயணிகள் இயற்கையோடு, கடலை ரசிக்கும் வகையில் கூரை கொட்டகை வடிவமைப்பில் ஏராளமான தனியாா் தங்கும் விடுதிகள் அங்கு இயங்கி வருகின்றன.

இந்நிலையில், தனியாா் விடுதி ஒன்றின் மாடியில் உள்ள கூரை கொட்டகையில் இருந்து சனிக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் கரும்புகை கிளம்பியது. சிறிதுநேரத்தில் மளமளவென தீபிடித்து எரிந்தது.

இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்புத் துறையினா் அங்கு விரைந்து வந்து போராடி தீயை அணைத்தனா். மின் கசிவால் இந்த தீ விபத்து ஏற்பட்டதா அல்லது வேறு காரணமா என்பது குறித்து புதுச்சேரி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com