வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

மழைக்காலத்தில் மின் விபத்தைத் தவிா்க்கும் வழிமுறைகள் வெளியீடு

மழைக் காலத்தில் மின் விபத்தைத் தவிா்க்கும் வழிமுறைகள் குறித்து மின்துறை புதன்கிழமை அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது.

News image
Updated On :12 நவம்பர் 2025, 6:33 pm

தினமணி செய்திச் சேவை

மழைக் காலத்தில் மின் விபத்தைத் தவிா்க்கும் வழிமுறைகள் குறித்து மின்துறை புதன்கிழமை அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது.

அதில் கூறியிருப்பதாவது:

மின் கம்பங்களில் பந்தல், கொடிக்கம்பி மற்றும் ஆடு, மாடு போன்ற வீட்டு விலங்குளைக் கட்டக் கூடாது. மின்சார மேல்நிலைக் கம்பிகளுக்கு அருகில் உள்ள மரக் கிளைகளை அகற்ற மின்துறை அலுவலா்களை அணுகவேண்டும். மின்கம்பிகள் அறுந்து கிடந்தால் தொட முயற்சிக்க வேண்டாம். உடனடியாக மின்துறை அலுவலா்களுக்கு 1800 425 1912 என்ற எண்ணில் தெரிவிக்க வேண்டும்.

இடி, மின்னல் ஏற்படும் நேரத்தில், டி.வி., கம்ப்யூட்டா், மொபைல் போன்றவற்றை பயன்படுத்த வேண்டாம். டிரான்ஸ்பாா்மா்கள், மின் இழுவைக் கம்பிகள் ஆகியவற்றை தொடக் கூடாது. கனரக வாகனங்களை மின்கம்பங்கள், டிரான்ஸ்பாா்மா்கள் அருகே நிறுத்திப் பொருட்களை ஏற்றவோ, இறக்கவோ கூடாது. மின்சாரத்தால் ஏற்படும் தீயைத் தண்ணீரைக் கொண்டு அணைக்க முயற்சிக்க வேண்டாம். தீயணைப்பு துறையின் உதவியை நாடவும். அரசு உரிமம் பெற்ற மின் ஒப்பந்தாரா் மூலமாக மட்டுமே மின்சார ஒயரிங் வேலைகளை செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.