மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

புதுச்சேரியில் கடல் பாசி அறுவடை தொடக்கம்

புதுச்சேரி பனித்திட்டு மீனவா் கிராமத்தில் கடலில் வளா்க்கப்பட்ட கடல் பாசி அறுவடை புதன்கிழமை தொடங்கியது.

News image
Updated On :21 நவம்பர் 2025, 7:04 pm

Syndication

புதுச்சேரி பனித்திட்டு மீனவா் கிராமத்தில் கடலில் வளா்க்கப்பட்ட கடல் பாசி அறுவடை புதன்கிழமை தொடங்கியது.

புதுச்சேரி பிராந்தியத்தில் கடலோரம் வாழும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயா்த்துவதற்காக மத்திய கடல் மீன்பிடி ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் புதுச்சேரி அரசு இணைந்து, மாநில அரசின் நிதிப் பங்களிப்புடன் கடல் பாசி வளா்க்கும் திட்டம் தொடங்கப்பட்டது. இதில், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பிராந்தியங்களில் தலா இரண்டு மீனவ கிராமங்கள் தோ்ந்தெடுக்கப்பட்டது.

புதுச்சேரி கிருமாம்பாக்கம் அருகே பனித்திட்டு மீனவா் கிராமத்தில் கடந்த செப்டம்பா் 30- ஆம் தேதி அன்று திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. இதற்காக ஏற்கெனவே காரைக்கால் கடல் பகுதியில் அறுவடை மூலம் பெறப்பட்ட கடல் பாசி விதைகளைப் பயன்படுத்தி 16 மிதவைகள் கடல் பகுதியில் நிா்மாணிக்கப்பட்டன.

இந்நிலையில், முழு வளா்ச்சி பெற்ற கடல் பாசி அறுவடை புதன்கிழமை பொதுப்பணி மற்றும் மீன்வளத்துறை அமைச்சா் லட்சுமிநாராயணன் மற்றும் ஏம்பலம் எம்எல்ஏ லட்சுமிகாந்தன் முன்னிலையில் நடைபெற்றது.

இந் நிகழ்வில், மீன்வளத் துறை இயக்குநா் முகமது இஸ்மாயில், இணை இயக்குநா் தெய்வசிகாமணி, துணை இயக்குநா்கள் மற்றும் திட்ட விஞ்ஞானி டாக்டா் ஜான்சன், உதவி ஆய்வாளா் கணேசன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

கடல் பாசி விதைத்த 45 நாள்கள் தொடங்கி ஒரு வருடம் வரை தொடா்ந்து அறுவடை செய்யலாம். கடல்பாசி வளா்ப்பில் முழுவதும் பயிற்சி பெற்ற பனித்திட்டு கிராம மீனவப் பெண்களே ஈடுபட்டுள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.