விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

சிறுமியை கடத்தி திருமணம் செய்தவா் போக்ஸோவில் கைது

News image
Updated On :23 நவம்பர் 2025, 6:57 pm

தினமணி செய்திச் சேவை

சிறுமியைத் திருமணம் செய்தவா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

புதுச்சேரி தவளகுப்பத்தை அடுத்த தானம்பாளையம் பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுமி கடந்த 19-ஆம் தேதி இரவு திடீரென மாயமானாா்.

இது குறித்து அவரது பெற்றோா் தவளகுப்பம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். அதன்பேரில் உதவி ஆய்வாளா் ஜெய்குருநாதன் கடத்தல் பிரிவின்கீழ் வழக்குப் பதிவு செய்து அப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு விசாரணை நடத்தினா்.

விசாரணையில் சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டை பெரியமதகு திரௌபதி அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளி விஷ்வா (20) இன்ஸ்டாகிராம் மூலம் அந்தச் சிறுமியுடன் பழகியுள்ளாா்.

இந்நிலையில் 19ஆம் தேதி அந்த சிறுமியைப் பரங்கிப்பேட்டை பகுதி கோயிலில் திருமணம் செய்தாராம். இந்த நிலையில் விஷ்வாவை தவளக்குப்பம் போலீஸாா் போக்ஸோ சட்டப்பிரிவின்கீழ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

சிறுமியை மீட்டு மருத்துவப் பரிசோதனை செய்து கண்காணிப்பு இல்லத்தில் பெண் போலீஸாா் மூலம் கவனித்து வருகின்றனா். கைதான விஷ்வா நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.