சிறுமியை கடத்தி திருமணம் செய்தவா் போக்ஸோவில் கைது

Published on

சிறுமியைத் திருமணம் செய்தவா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

புதுச்சேரி தவளகுப்பத்தை அடுத்த தானம்பாளையம் பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுமி கடந்த 19-ஆம் தேதி இரவு திடீரென மாயமானாா்.

இது குறித்து அவரது பெற்றோா் தவளகுப்பம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். அதன்பேரில் உதவி ஆய்வாளா் ஜெய்குருநாதன் கடத்தல் பிரிவின்கீழ் வழக்குப் பதிவு செய்து அப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு விசாரணை நடத்தினா்.

விசாரணையில் சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டை பெரியமதகு திரௌபதி அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளி விஷ்வா (20) இன்ஸ்டாகிராம் மூலம் அந்தச் சிறுமியுடன் பழகியுள்ளாா்.

இந்நிலையில் 19ஆம் தேதி அந்த சிறுமியைப் பரங்கிப்பேட்டை பகுதி கோயிலில் திருமணம் செய்தாராம். இந்த நிலையில் விஷ்வாவை தவளக்குப்பம் போலீஸாா் போக்ஸோ சட்டப்பிரிவின்கீழ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

சிறுமியை மீட்டு மருத்துவப் பரிசோதனை செய்து கண்காணிப்பு இல்லத்தில் பெண் போலீஸாா் மூலம் கவனித்து வருகின்றனா். கைதான விஷ்வா நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.

X
Dinamani
www.dinamani.com