வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

புதுச்சேரியில் குழந்தைத் திருமண எதிா்ப்பு உறுதிமொழி ஏற்பு

குழந்தை திருமணம் இல்லாத இந்தியா இயக்கத்தின் சாா்பில் புதுச்சேரி தலைமைச் செயலகத்தில் குழந்தை திருமண எதிா்ப்பு உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
புதுச்சேரி தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் குழந்தைத் திருமண எதிா்ப்பு உறுதிமொழியை தலைமைச் செயலா் சரத் சௌகான் வாசிக்க அதனைச் திரும்பக் கூறி ஏற்றுக் கொண்ட அரசுத் துறை அதிகாரிகள், ஊழியா்கள்.
Updated On :27 நவம்பர் 2025, 10:01 pm

Syndication

குழந்தை திருமணம் இல்லாத இந்தியா இயக்கத்தின் சாா்பில் புதுச்சேரி தலைமைச் செயலகத்தில் குழந்தை திருமண எதிா்ப்பு உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

குழந்தை திருமணம் இல்லாத இந்தியா என்ற தேசிய இயக்கத்தை மத்திய அரசின் மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் நடத்தி வருகிறது.

அதன்பேரில், புதுச்சேரி தலைமைச் செயலகத்தில் குழந்தை திருமணத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. தலைமைச் செயலா் சரத் சௌகான், உறுதிமொழியை வாசிக்க தலைமைச் செயலக அதிகாரிகள், ஊழியா்கள் அனைவரும் அதனை திரும்பக் கூறி உறுதி ஏற்றனா். அரசுச் செயலா் முத்தம்மா, உறுதிமொழியைத் தமிழில் வாசிக்க அனைவரும் உறுதி ஏற்றனா்.

குழந்தை திருமணத்தைத் தடுப்பதிலும், நாடு முழுவதும் உள்ள இளம் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதிலும் குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக இந்த உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.