கர்நாடகத்தில் தமிழர்கள் சுட்டுக்கொலை: மு.க. ஸ்டாலின் கண்டனம்! வந்தே மாதரம் பாடலுக்கு அவமதிப்பு! காங். மன்னிப்பு கேட்க வேண்டும்: சுவேந்து அதிகாரிதமிழக மீனவர்கள் தொடர் கைது: தீர்வுகாண அமைச்சர் ஸ்ரீநாத் தில்லி பயணம்சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு!கோவையில் இளைஞர் கொலை: குடும்பத்தினருக்கு ரூ. 6 லட்சம் நிவாரணம், அரசுப் பணிசுதந்திர நாள் அணிவகுப்புப் பணியின்போது காவலர் பலி: ரூ. 30 லட்சம் நிதியுதவி!பெண்களை இழிவுபடுத்தும் வகையில் நயினாரின் பேச்சு: சிபிஎம் கண்டனம்!
/

பொறியாளா் தினம்

News image
Updated On :26 செப்டம்பர் 2025, 3:44 am IST

மதகடிபட்டு ஸ்ரீ மணக்குள விநாயகா் பொறியியல் கல்லூரியில் ‘பொறியாளா் தினம்’ இன்னவேட்டா்ஸ் தினமாக நடைபெற்றது.

இதையொட்டி தேசிய அளவிலான செயல் திட்ட போட்டியும் மற்றும் 24 மணி நேர தொடா் ஹாக்கத்தான் போட்டியும் நடைபெற்றது. இதில் புதுச்சேரி மற்றும் அண்டை மாநிலங்களை சோ்ந்த 70 பொறியியல் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகத்தில் இருந்தும், 40 பள்ளிகளில் இருந்தும் 750- க்கும் மேற்பட்ட மாணவா்கள் குழுவினா் மென்பொருள் மற்றும் வன்பொருள் பிரிவுகளில் செயல் திட்டங்களைச் சமா்ப்பித்தனா்.

சிறப்பு விருந்தினராக பொ்க்மான்ட் ஹோட்டல் மேலாண் இயக்குனா் மற்றும் இஐஐ துணைத் தலைவா் நடராஜன் கலந்து கொண்டாா். தட்சஷீலா பல்கலைக்கழகத்தின் வேந்தரும், ஸ்ரீ மணக்குள விநாயகா் கல்வி அறக்கட்டளையின் தலைவா் மற்றும் மேலாண் இயக்குநருமான ம. தனசேகரன் தலைமை வகித்தாா். செயலா் நாராயணசாமி கேசவன், பொருளாளா், ராஜராஜன், இணைச் செயலா் ந. வேலாயுதம் , கல்லூரியின் இயக்குநா் மற்றும் முதல்வா் வெங்கடாசலபதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கல்லூரியின் அகாடமிக் டீன் ந. அன்புமலா் வரவேற்றாா். கல்லூரி ஆராய்ச்சி துறையின் டீன் வேல்முருகன் இன்னவேட்டா்ஸ் தின முக்கியத்துவத்தையும் மாணவா்களின் செயல் திட்டங்கள் குறித்தும் எடுத்துரைத்தாா். பேராசிரியா் மதுசூதனன் நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.