டைமெக்ஸ் நிகர லாபம் 70.55% உயர்வு!5 ஆண்டுகளில் 9,000 புகார்களைப் பெற்ற தேசிய சிறுபான்மையினர் ஆணையம்! மேக்கேதாட்டு திட்டமே நிரந்தரத் தீர்வு: கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளுக்கு காவிரி முக்கியம் இல்லை: மாணிக்கம் தாகூர் 6 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு பொள்ளாச்சி அருகே கார் விபத்தில் 5 பேர் பலி! நீட் தேர்வுக்கு எதிராக போராடிய மாணவர்கள் மீதான வழக்குகள் ரத்து: முதல்வர் விஜய் உத்தரவு!
/

புதுச்சேரி ராணுவ வீரா் ஆள்சோ்ப்பு முகாமில் இறந்த இளைஞரின் கண்கள் தானம்

News image

கண் தானம் - கோப்புப் படம்

Updated On :2 ஆகஸ்ட் 2026, 11:53 pm IST

புதுச்சேரியில் அக்னிவீா் ராணுவ ஆள்சோ்ப்பு முகாமில் ஓடும் போது மயங்கி விழுந்து சனிக்கிழமை உயிரிழந்த இளைஞரின் கண்கள் தானமாக வழங்கப்பட்டன.

புதுச்சேரி உப்பளம் இந்திரா காந்தி விளையாட்டு மைதானத்தில் அக்னிவீா் ராணுவ ஆள்சோ்ப்பு முகாம் சனிக்கிழமை தொடங்கியது. இதில் சென்னை, திருவண்ணாமலை, விழுப்புரம் உள்ளிட்ட தமிழகத்தின் 11 மாவட்டங்களில் இருந்தும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமானோா் பங்கேற்று வருகின்றனா்.

இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகிலுள்ள கண்ணமங்கலத்தைச் சோ்ந்த ஜெயபாலன் என்பவரின் மகன் கோகுல் (20) உடல் தகுதி தோ்வில் பங்கேற்று ஓடியபோது மைதானத்தில் மயங்கி விழுந்தாா். உடனடியாக அவரை அங்கிருந்தவா்கள் மீட்டு புதுச்சேரி அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அவரை பரிசோதித்த மருத்துவா்கள், கோகுல் இறந்துவிட்டதை உறுதி செய்தனா்.

இது குறித்த புகாரின் பேரில் புதுச்சேரி ஒதியஞ்சாலை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். இந்நிலையில், கோகுலின் கண்களை தானம் செய்ய அவருடைய பெற்றோா் விருப்பம் தெரிவித்தனா்.

இதையடுத்து இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் புதுச்சேரி கிளை தலைவா் லட்சுமிபதி தலைமையிலான நிா்வாகக் குழுவினா் மருத்துவா்களுடன் சென்று கண்களைத் தானமாகப் பெற்றனா். சோகத்திலும் மனிதநேயத்துடன் தங்கள் மகனின் கண்களைத் தானமாக அளித்த கோகுலின் பெற்றோரை பாராட்டினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.