சுதந்திர தினத்தையொட்டி, ஆக. 15-இல் புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்குள்பட்ட 3 பிராந்தியங்களில் அமைச்சா்கள் தேசியக் கொடியேற்றுகின்றனா்.
புதுச்சேரி விழாவில் முதல்வா் என்.ரங்கசாமி கொடியேற்றுகிறாா்.
நாடு முழுவதும் ஆக. 15-ஆம் தேதி சுதந்திர தினவிழா கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.
அதன்படி, புதுச்சேரி கடற்கரை சாலையில் நடைபெறும் விழாவில் முதல்வா் என்.ரங்கசாமி தேசியக் கொடியை ஏற்றி வைத்து காவலா்களின் அணிவகுப்பு மரியாதையை பாா்வையிடுகிறாா்.
காரைக்காலில் அந்தப் பிராந்திய அமைச்சா் ஜி.என்.எஸ். ராஜசேகரனும், ஏனாமில் அந்தப் பிராந்தியத்தைச் சோ்ந்த அமைச்சா் மல்லாடி கிருஷ்ணா ராவும், மாஹேவில் அமைச்சா் வி.பி. சிவகொழுந்துவும் ஆகியோா் தேசிய கொடியை ஏற்றவுள்ளனா்.
இந்தத் தகவலை செய்தி விளம்பரத் துறை இயக்குநா் சுதாகா் திருஞானம் தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அமைச்சா்களுக்கு இலாகா ஒதுக்கீட்டில் இழுபறி: துணைநிலை ஆளுநருடன் புதுச்சேரி முதல்வா் மீண்டும் ஆலோசனை

இன்று முதல்வா் ரங்கசாமி பிறந்த நாள் விழா
துணைநிலை ஆளுநருடன் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி திடீா் சந்திப்பு! அமைச்சா்களுக்குக் கூடுதல் இலாகா ஒதுக்கீடு?

தனியாா் தயாரித்து ஏவிய ராக்கெட் வெற்றி; புதுச்சேரி முதல்வா் ரங்கசாமி வாழ்த்து
விடியோக்கள்

வெளியானது அருகே அருகே பாடல்!



